திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில்

வியக்க வைக்கும் திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம்

கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவீழிமிழலை . இறைவன் திருநாமம் வீழிநாதேஸ்வரர். இறைவியின் திருநாமம் சுந்தரகுசாம்பிகை.

இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவில் அம்மன் சன்னதியைச் சுற்றிவிட்டு வெளியே திருச்சுற்று வழியாக வரும்போது ராஜ கோபுரத்தினை அடுத்து, மிகவும் புகழ் பெற்ற வௌவால் நெத்தி மண்டபம் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டு அதிசயங்களில் ஒன்றான, கட்டடக்கலைக்குப் புகழ் பெற்ற மண்டபமாகும். சித்திரை மாதத்தில் இங்குதான் இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

இம்மண்டபம் 175 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகவும், நடுப்பகுதி வௌவால் நெற்றி அமைப்பிலும் உள்ளது. மண்டபத்தின் நடுப்பகுதியில் தூண்கள் கிடையாது. குறுக்கே எந்தவித பிடிமானமும் கிடையாது. நேரே கையை வளைத்து குவித்தார் போல, ஒவ்வொரு கல்லாக ஒட்ட வைத்து, மண்டபத்தின் கூரை உருவாக்கப்பட்டிருக்கிறது. வௌவால் தொங்க முடியாத வகையில் இருப்பதனால், வௌவால் நெத்தி மண்டபம் என்ற பெயர் ஏற்பட்டது. மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்கும்போது அதன் பிரமிப்பை நாம் உணர முடியும். நம் முன்னோர்கள் கட்டிடக் கலையில் பெற்றிருந்த சிறப்பையும், தொழில் நுட்பத் திறனையும் இந்த மண்டபம் நமக்கு பறை சாற்றுகின்றது.

தமிழகத்தின் அதிசயம் என துறை வல்லுனர்களால் ஒப்புகொள்ளப்பட்டதும், புதிதாக கற்றளி எழுப்பும்போது முற்கால சிற்பிகள் தங்களால் மீண்டும் உருவாக்க முடியாதவை என ஒப்புக்கொண்ட கோவில்/சிற்ப வேலைப்பாடுகள் ஆறு ஆகும். அவை கடாரங்கொண்டான் மதில் , ஆவுடையார் கோவில் கொடுங்கை , தஞ்சை பெரியகோவில் விமானம் , திருவலஞ்சுழி கருங்கல் பலகணி , திருவீழிமிழலை வௌவால் நெத்தி மண்டபம், திருநனிபள்ளி கோடி விட்டம் ஆகியவை ஆகும். முற்கால சிற்பிகள் தங்கள் வேலைக்கான ஒப்பந்தம் எழுதும்போது, மேற்கூறிய ஆறு வேலைப்பாடுகள் தவிர்த்து எந்த வேலைப்பாடும் தங்களால் செய்து தர முடியும் என்று உறுதி கொடுப்பார்களாகும். இதிலிருந்து இந்த வேலைப்பாடுகளின் உன்னதத் தன்மையை நாம் உணரலாம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவீழிமிழிலை திருத்தலத்து ஆலயத்து படிகளின் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/5fj3tlcrj9w49dly9czh33fnhdtaag

Read More
பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்
விநாயகர், vinayakar, Vinayagar Alaya Thuligal விநாயகர், vinayakar, Vinayagar Alaya Thuligal

பேரங்கியூர் திருமூலநாதர் கோவில்

மான், மழு ஏந்திய விநாயகர்

விழுப்புரம் - திருச்சி செல்லும் சாலையில், விழுப்புரத்திலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் உள்ள பேரங்கியூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது திருமூலநாதர் கோவில். இக்கோவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. இக்கோவிலின் அர்த்த மண்டப தென்புறக் கோட்டத்தில், தன் திருக்கரங்களில் மான், மழு ஏந்தியபடி தலை ஒருபுறமாக திரும்பிப் பார்க்கும் கோலத்தில் விநாயகர் சிற்பம் காணப்படுகிறது. இவரின் தலைக்கு மேல் குடையும், இருபுறமும் சாமரங்களும் காட்டப்பட்டுள்ளன. பொதுவாக மான், மழு ஏந்தியபடி சிவபெருமான்தான் காட்சி அளிப்பார். ஆனால் இங்கு மான், மழு ஏந்தியபடி விநாயகர் காட்சியளிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாத காட்சியாகும். அதேபோல் தட்சிணாமூர்த்தி பகவான் வலது காலை தொங்க விட்டும், இடது காலை வலது காலின் மீது தூக்கி வைத்தும் , சின்முத்திரை காட்டியபடி, சற்றுச் சாய்வாக அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவரது இந்தக் கோலம் தனிச் சிறப்புடையதாகும்.

கருவறையின் மேற்குப் பக்க சுவரில் ஒரு அளவு கோல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 365 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இந்த அளவையானது, சோழர்களின் ஆட்சி காலத்தில் நில அளவைக்காகப் பயன்படுத்தி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. கோவிலில், முதலாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், ராஜாதி ராஜன், குலோத்துங்கன் ஆகிய சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. குறிப்பாக ராஜராஜனின் அண்ணனான ஆதித்த கரிகாலனின் கல்வெட்டும் இங்குள்ளது, அரிய தகவலாகும்.

Read More
கொட்டையூர்  கோடீஸ்வரர் கோவில்

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் எழுந்தருளியிருக்கும் தேவாரத் தலம்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பந்தாடுநாயகி. இத்தலத்தில் நவக்கிரக நாயகர்கள் தங்களுக்கே உரித்தான வாகனங்களுடன் காட்சி தருகிறார்கள. நவக்கிரகங்களின் இந்த அரிதானத் தோற்றத்தை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்

https://www.alayathuligal.com/blog/cddc7ew72pt4xthkmmge3jjj8ncynw

Read More
திருக்கோகர்ணம்   கோகர்ணேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் கோவில்

தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை-திருச்சி சாலையில், புதுக்கோட்டை நகரத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருக்கோகர்ணம். இறைவன் திருநாமம் கோகர்ணேஸ்வரர். இறைவியின் திருநாமம் பிரகதாம்பாள் (அரைக்காசு அம்மன்). குடைவரைக்குகைக் கோயிலான இக்கோயில் பல்லவ அரசனான முதலாவது மகேந்திர வர்மன் காலத்தைச் சேர்ந்தது.

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் கோவிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அதனால் புதுக்கோட்டையை ஆண்ட அரசர்களின் பெயரில் அடைமொழியாக ஸ்ரீ பிரகதாம்பாதாஸ் என்ற சொல் சேர்க்கப்பட்டது.

அந்நாளில் பிரகதாம்பாள் அம்பிகைக்கு நவராத்திரி விழாவினை, புதுக்கோட்டை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல், பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர். புதுக்கோட்டை மன்னர்களால் வெளியிடப்பட்ட அந்த அரைக்காசு நாணயம், புதுக்கோட்டை அம்மன் காசு அல்லது அம்மன் சல்லி என அழைக்கப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் பிரகதாம்பாள் அம்மனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

பத்திரம், நகை, எந்த பொருள் தொலைந்தாலும் இந்த அம்மனை வேண்டிக் கொண்டு காசு எடுத்து வைத்தால் அந்தப் பொருள் கிடைத்து விடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

அயல்நாட்டில் கல்வி பயிலும் யோகம் அருளும் அஷ்ட தட்சிணாமூர்த்தி தலம்

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனையில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கீழமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது காளஹஸ்தீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலில் அஷ்ட தட்சிணாமூர்த்திகள் அருள் புரிகிறார்கள்.

இவர்களில் ஸ்ரீஞான தட்சிணாமூர்த்தி கிழக்குத் திசையிலும், ஸ்ரீயோக பட்டாபிராம தட்சிணாமூர்த்தி வட கிழக்கிலும், ஸ்ரீசக்தி தட்சிணாமூர்த்தி தென்கிழக்கிலும், ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தி தெற்கிலும், ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தென்மேற்கிலும், ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மேற்கிலும், ஸ்ரீஆசிந தட்சிணாமூர்த்தி(பரசுராமருக்கு வில்லும் அம்பும் வழங்கியவர்) வடமேற்கிலும், ஸ்ரீவர தட்சிணாமூர்த்தி (வேதத்துக்கு குரு) வடக்கிலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.

படிப்பில் மந்த நிலையில் உள்ளவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், அதிக மதிப்பெண் எடுத்து உயர் கல்வியில் சேரத் துடிப்பவர்கள், மேலை நாடுகளுக்குச் செல்ல எண்ணுவோர் இந்தத் தலத்துக்கு வந்து, அஷ்ட தட்சிணாமூர்த்தியரையும் வணங்கினால், உரிய பலன் கிடைக்கும்.

கோயிலின் ஞான கங்கை தீர்த்தக்குளத்தில் 11 வியாழக் கிழமைகள் நீராடி, அஷ்ட தட்சிணாமூர்த்திகளுக்கும் 11 வகை அபிஷேகங்கள் செய்து, எட்டு நெய்த் தீபங்கள் ஏற்றி வைத்து, மஞ்சள் பட்டு மற்றும் மஞ்சள் அரளிப்பூ சார்த்தி வழிபட, தடைப்பட்ட கல்விச் செல்வம் தங்குதடையின்றிக் கிடைக்கும்; விரும்பிய பாடப் பிரிவில் சாதனை படைக்கலாம் என்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற, அஷ்ட தட்சிணாமூர்த்தியருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். அஷ்ட தட்சிணாமூர்த்தியரின் அருளால் வெளிநாட்டில் கல்வி பயிலும் யோகமும் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

2. இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/t638e9awnfbxrh8k2wyt4ha975ee4w

Read More
நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்

பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக பெருமாளே திதி கொடுக்கும் தலம்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது நென்மேலி திருத்தலம். மூலவர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள். உற்சவர் ஸ்ரீ ஸ்ராத்த ஸம்ரக்ஷண நாராயணப் பெருமாள். இதுவரை, பித்ருக்களுக்கு தர்ப்பணமோ, திதியோ கொடுக்கவே இல்லை. பித்ருக் கடனைத் தீர்க்க வாரிசு இல்லை. ஆண் வாரிசு இல்லை. மகள்தான் உண்டு என பித்ரு கடன் செலுத்த முடியாதவர்களுக்காக, இத்தலத்து பெருமாளே திதி கொடுத்து நம் பித்ரு தோஷங்களை நிவர்த்தி செய்கிறார்.

தல வரலாறு

இத்தலம், அந்தக் காலத்தில் புண்டரீக நல்லூர் என அழைக்கப்பட்டது. அதாவது பிண்டம் வைத்த நல்லூர் எனப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றது. இந்தப் பகுதியை யக்ஞநாராயண சர்மா என்பவர் திவானாகப் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார். இவரின் மனைவி சரஸ வாணி. இருவரும் பெருமாளின் மீது மாறா பக்தி கொண்டிருந்தார்கள். யக்ஞநாராயண சர்மா வரியாக வசூலித்த பணத்தையெல்லாம், நென்மேலி பெருமாளுக்கே தம்பதியர் இருவரும் செலவு செய்தார்கள். இதனால், ஆற்காடு நவாப்பிடம் வரிப்பணத்தையெல்லாம் செலுத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது. இதை அறிந்த நவாப், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார். அதை அறிந்த இந்தத் தம்பதி, திருவிடந்தை குளத்தில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்டனர். அப்போது உயிர் பிரியும் தருணத்தில், 'எங்களுக்கு வாரிசு இல்லையே. எங்களின் ஈமக்காரியங்களை செய்ய எவரும் இல்லையே' என வருந்தினார்கள். இருவரும் இறந்தார்கள். பின்னர், அவர்கள் இருவருக்கும் பெருமாளே வந்து சிராத்தம் உள்ளிட்ட ஈமக்காரியங்களைச் செய்தார் என்கிறது தல வரலாறு.

அன்றில் இருந்து இன்று வரை, பிள்ளை இல்லாதவர்களுக்கோ, அகால மரணம் அடைந்தவர்களுக்கோ, ஏதோவொரு சூழலால், சிராத்தம் தடைப்பட்டு போயிருந்தவர்களுக்கோ, இந்தக் கோவிலில் சிராத்தம் செய்யப்படுகிறது. அதாவது பெருமாளே சிராத்தம் செய்வதாக ஐதீகம். இங்கே, ஆலயத்தில் பெருமாளின் திருப்பாதம் உள்ளது. அந்தப் பாதத்தைக் கொண்டுதான் சிராத்த காரியங்கள் செய்யப்படுகின்றன. இங்கு, காலை முதல் மதிய வேளைக்குள் சிராத்தம் செய்யப்படுகிறது. வெண்பொங்கல், தயிர்சாதம், பிரண்டையும் எள்ளும் கலந்த துவையல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்படுகிறது. பின்னர் அதில் இருந்து பிண்டமாக எடுத்து, முன்னோருக்கு பிண்டம் வைத்து பூஜிக்கப்படுகிறது. அதன் ஒருபகுதியை அவர்களுக்கு உணவாகவும் இன்னொரு பகுதி தானமாகவும் வழங்கப்படுகிறது. காசி, கயா, ராமேஸ்வரம் முதலான புண்ணிய க்ஷேத்திரங்களில் சிராத்தம் செய்த பலன், நென்மேலி தலத்துக்கு வந்து சிராத்தம் செய்தால் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், பித்ரு சாபம் உள்ளவர்கள், வீட்டில் அகால மரணம் அடைந்தவர்கள், துர்மரணம் தோஷம் உள்ளவர்களின் குடும்பத்தார், இங்கு வந்து சிராத்தம் செய்வது ரொம்பவே நல்லது.

இங்கு, தினமும் சிராத்த காரியங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, அமாவாசை, பஞ்சமி, ஏகாதசி முதலான புண்ணிய திதிகளில் இங்கு வந்து சிராத்தம் செய்வது கூடுதல் விசேஷம். வீட்டில் சகல தோஷங்களும் விலகும்; சந்தோஷம் பெருகும்.

Read More
தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்

தம்பதியர்க்கு கருத்து ஒற்றுமையை அருளும் முருகப்பெருமான்

தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். நடுவில் முருகன் நின்றிருக்க, வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, அவர்கள் வாழ்வில் அன்னியோன்யம் வளர்ந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.

ஆலயத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும். இக்கோயிலில் இன்னொரு சிறப்பு - ஜுரதேவர்! இவருக்கு மிளகு அபிஷேகம் செய்து, காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பக்தர்கள் உடனடி நிவாரணம் பெறுகிறார்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி

https://www.alayathuligal.com/blog/jafy4l7743sl49adbja5zkh8876dz9

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி.

இக்கோவிலின் மகா மண்டபத்திலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியே வந்தால் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார். இங்குள்ள நந்தி பெருமானுக்கு ஒரு பக்க காது சிறியதாகக் காட்சியளிக்கின்றது. பிரளய காலத்தில் உலகமே மூழ்கியபோது இத்தலம் மட்டும் தண்ணீரில் மூழ்காமல் வெளியே தெரிந்தது. அப்போது பிரம்மா இத்தலத்தில் இறங்கிப் பார்த்தார். அங்கே விசுவநாத சுவாமி எழுந்தருளியிருப்பதைக் கண்டு வழிபட்டார். ஈசன் அப்போது ஜோதிர்லிங்கமாய் காட்சி கொடுத்தார்.

இந்த நிலையில் பிரளயத்தில் சிக்கிக் கொண்ட நந்தி இறைவனைத் தேடி இத்தலத்திற்கு வேகமாக வந்தது. அப்போது அது கால் சறுக்கி ஒரு பக்கமாக விழுந்துவிடவே, அதன் வலதுக்காது மடங்கி உள்நோக்கிச் சென்று விட்டது. இதனால் வருந்திய நந்தி இறைவனை நோக்க, நந்தியின் உள்ளப் போக்கை அறிந்த இறைவன், 'நந்தியே! வருந்தாதே. யார் ஒருவர் தங்கள் குறைகளை உன் வலக் காது இருந்த பக்கம் சொல்கிறார்களோ, அதனை நான் உடனே நிவர்த்தி செய்வேன்' என்று ஆறுதல் கூறினார். அதன்படி, இந்த நந்தியின் வலக்காதுப் பக்கம் தங்கள் குறைகளைக் கூறினால் அது நிவர்த்தி ஆகி விடுகிறது என்கிறார்கள்.

ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படும் தலம்

இக்கோவிலில் மாதம்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடு பிரசித்தி பெற்றதாகும். நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. பிரதோஷ காலங்களில் சிவபெருமான் ருத்ராட்சக் கவசம் சாற்றப்பட்டு காட்சி அளிப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக அமைகின்றது எனப் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் பிரதோஷ தினங்களிலும், மகா சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களிலும் ருத்திராட்சம் பிரசாதமாகத் தரப்படுவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

பெரிய கருவறை உடைய சிவாலயங்கள்

பொதுவாக கோவில்களில் கருவறையானது ஒரிரு அர்ச்சகர்கள் நின்று தெய்வத்தை பூஜிக்கும் அளவிற்குத்தான் அமைந்திருக்கும். ஆனால், தேவாரப் பாடல் பெற்ற தலங்களான கும்பகோணத்திற்கு அருகே உள்ள இன்னம்பரிலும், பூம்புகார் அடுத்த உள்ள புஞ்சையிலும் ஒரு யானை உள்ளே சென்று வழிபடக் கூடிய அளவில் கருவறை உள்ளது.இத்தகைய பெரிய கருவறை வேறு எந்த சிவாலயத்திலும் இல்லை என்பது இந்தத் தலங்களின் தனிச் சிறப்பாகும். யானை சென்று வழிபடும் அளவு கருவறையை உருவாக்கியது, சோழர்களின் பார்போற்றும் கட்டிடகலை சிறப்பாகும்.

Read More
எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில்

சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம்

புதுக்கோட்டை, அறந்தாங்கியிலிருந்து, 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோவில். இது 2000 ஆண்டுகள் பழமையானது. இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி. இக்கோவில் தொண்டை நாட்டு மன்னன் காளிங்கராயனால் கட்டப்பட்டது.

ஒரு சமயம் அகஸ்திய முனிவர், காசி விஸ்வநாதரை தரிசித்து விட்டு, எட்டியத்தளி கிராமத்துக்கு வந்தார். அப்போது மன்னன் காளிங்கராயன் தனது அஷ்டம சனி தோஷம் நீங்க, திருநள்ளாறு சனி ஆலயம் செல்வதற்கு, இவ்வழியாக வந்தான். அகஸ்தியர், மன்னன் காளிங்கராயனிடம் இக்கோவிலை அமைக்கச் சொன்னார்.பின், நவகிரகங்களை அமைக்கச்சொன்னார். அதன் பின் காளிங்கராய மன்னன் இக்கோவிலை அமைத்ததாக இத்தல வரலாறு கூறுகிறது. திருநள்ளாறு சனிபகவானை விட இவர் அருள் வழங்குவதில் பலமடங்கு சக்தி மிக்கவர் என்று கூறப்படுகிறது. அதனால், இத்திருத்தலத்தில் சனி பகவானின் சக்தி இங்கு அதிகம்.

பொதுவாக, கோயில்களில் சனீஸ்வரருக்கு இடது புறம் ராகுவும், வலது புறம் கேதுவும் இருப்பார்கள். ஆனால் இந்த ஆலயத்தில் சனி பகவானின் வலதுபுறம் ராகு பகவானும், இடதுபுறம் கேது பகவானும் உள்ளனர். அதனால் ராகுவின் பார்வை சனி பகவானின் மீது படுகிறது. எனவே, இங்கு வந்து வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்குகிறதாம். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும்.

Read More
கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில்

இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்யும் அம்பிகை

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, கீழமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சி செய்த உக்கிரபாண்டியனால் கட்டப்பட்டதாகும். இறைவன் திருநாமம் காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஸ்ரீஞானாம்பிகை. தேவர்களுக்கு பரப்பிரம்ம தத்துவத்தை உபதேசம் செய்ததால் இந்த அம்பிகைக்கு ஸ்ரீஞானாம்பிகை என்ற திருநாமம் உணடாயிற்று.

கீழமங்கலம் கோவிலில் உள்ள ஸ்ரீஞானாம்பிகை வர, அபய கைகளுடன் சூட்சுமத்தில் வலது கையில் தாமரை மலர், இடது கையில் நீலோற்பலம் மலருடன், ஜடாமகுடத்துடன், சமமான சந்திரகலையுடன், மூன்று கண்களுடன், பத்மத்தின் மேல் நின்ற கோலத்தில் அருட்காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். நீலோற்பலம் மலர் என்பது ஒரு வகை தாமரையை சேர்ந்தது. இம்மலர் இரவில்தான் மலரும். அம்பிகை ஒரு கையில் நீலோற்பலம் வைத்திருப்பது, அம்பிகை இரவில் சூட்சுமமாக சிவபெருமானை பூஜிப்பதையே உணர்த்துகிறது. பகவானுடைய வலது கண் சூரியன், இடது கண் சந்திரனின் அம்சமாகும். அதனால்தான் சூரியனால் தாமரையும், சந்திரனால் நீலோற்பலமும் (நீல நிறத்தாமரையும்) மலர்கின்றன. நீலோற்பலத்திற்கு ஒரு வருடம் வரை நிர்மால்ய தோஷம் கிடையாது. துளசி, வில்வத்திற்கு கூட 6 மாதம்தான் நிர்மால்ய தோஷம் கிடையாது. எனவே நீலோற்பலம் மிகச் சிறந்தது.

.திருவானைக்கோவிலில் அருள்பாலிக்கும் அம்பிகை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி இரண்டு கைகளிலும் தாமரை மலர் உள்ளது. இது பகலில் மலரும் மலராகும். அதனால்தான் திருவானைக்கோவிலில் பகலில் உச்சிக் காலத்தில் அம்பிகை சிவ பூஜை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது. இங்கு கீழமங்கலத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை வலக்கையில் தாமரையும், இடக்கையில் நீலோற்பலமும் வைத்திருப்பதால், அம்பிகை இரவும், பகலும் இடைவிடாமல் சிவ பூஜை செய்து கொண்டும், வரமும், அபயமும் எப்போதும் வழங்குவேன் என்று வர, அபய முத்திரைகளுடன் காட்சி கொடுத்து, அருள் பாலிக்கிறாள்.

ஸ்ரீ ஞானாம்பிகை சூடியிருக்கும் சந்திரன் மூன்றாம்பிறைச் சந்திரன் ஆகும். அதாவது 'சம கலை சந்திரன்'. இது கோணலான பிறைச் சந்திரன் கிடையாது. ஸ்ரீ ஞானம்பிகைக்கே உள்ள அதிவிசேஷம் இது. 'சம கலை சந்திரனைச்' சூடிய அம்பிகை என்பதால், 'என்னால் அழிவு கிடையாது. ஆக்கமும் ஆற்றலும் மட்டுமே. ஞானத்திற்கு என்றுமே அழிவு கிடையாது' என்பதையே வலியுறுத்துகிறாள்.

இந்த அம்பிகையை தரிசனம் செய்தவர்கள் , மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யவே ஆசைப்படுவார்கள். அந்த அளவிற்கு பக்தர்களை மெய் மறக்கச் செய்யும், மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யத் தூண்டும் அளவிற்கு ஞான வசீகரத் தோற்றம் உடையவள் ஸ்ரீஞானாம்பிகை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

வருடத்திற்கு நான்கு முறை அன்னாபிஷேகம் செய்யப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/8aksam98depeyt9nx7nyan3nc728lh

Read More
தருமபுரம்  யாழ்மூரிநாதர் கோவில்

தருமபுரம் யாழ்மூரிநாதர் கோவில்

காவி ஆடை அணியும் தட்சிணாமூர்த்தி

புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தருமபுரம். இறைவன் திருநாமம் யாழ்மூரிநாதர். இறைவியின் திருநாமம் தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை.

ஒரு சமயம் சிவபெருமான் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தெட்சிணாமூர்த்தி இசையை விரும்பிக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார்.பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு அவருக்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் தட்சிணாமூர்த்திக்கு காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்.தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை மற்றத் தலங்களில் காண்பது அபூர்வம்.

இங்கு சிவபெருமான் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.

Read More
ஆவூர்  பசுபதீஸ்வரர் கோவில்

ஆவூர் பசுபதீஸ்வரர் கோவில்

பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்யும் பஞ்ச பைரவர்கள்

கும்பகோணத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேவாரத் தலம் ஆவூர். இங்கு பசுபதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இறைவன் திருநாமம் பசுபதீஸ்வரர். இத்தலத்தில் பங்கஜவல்லி , மங்களாம்பிகை என்ற திருநாமம் தாங்கி இரண்டு அம்பிகைகள் அருள் புரிகிறார்கள்.

இந்தக் கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக பஞ்ச பைரவ மூர்த்திகள் உள்ளனர். ஐந்து பைரவர்களும் ஒரே பீடத்தில் வீற்றிருக்கிறார்கள். இக்கோவிலில் மங்களாம்பிகை அம்மனை பிரதிஷ்டை செய்யும்போது, ஹோமத்திலிருந்து பஞ்ச பைரவர்கள் வெளிப்பட்டனர். அவர்களையும் பிரதிஷ்டை செய்து ஆராதனைகள் செய்தால் பித்ருசாபம் நீங்கப் பெறும் என அசரீரி ஒலித்துள்ளது. அதன்படி பஞ்ச பைரவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். பஞ்ச பைரவர்களை வழிபட்டதன் மூலம் தசரத மன்னனின் பித்ரு சாபம் விலகியது. எனவே இத்தலம் பித்ரு சாப நிவர்த்தித் தலமாக விளங்குகின்றது.

பிதுர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து வந்தால் உடனடியாக பலன் கிடைக்கும் .ஒரு சிலர் நிறைய சம்பாதிப்பார்கள். இருந்தாலும் கடன் தீராது. இன்னும் சிலருக்கு நல்ல திறமைகள் இருக்கும். ஆனால் சரியான வேலையும் வாய்ப்புகளும் அமையாமல் வருமானம் இன்றி இருப்பார்கள். பல பேர் அனைத்து செல்வங்களையும் பெற்று இருப்பார்கள். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. அப்படிப்பட்டவர்களின் அந்த நிலைக்கு பிதுர் தோஷம் தான் காரணம். அவர்கள் அனைவரும் இத்தல பஞ்ச பைரவர்களை வழிபட்டு பிதுர் தோஷத்தை போக்கி வாழ்வில் வளம் பெறலாம். இவர்களை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கும். குறைவான வருமானம் கடன் சிக்கல்கள், வேலைவாய்ப்பின்மை, திருமண சிக்கல்கள் போன்றவைகள் பிதுர் தோஷ காரணத்தினால் கூட ஏற்படலாம். அதனை இந்த தலத்தில் உள்ள பஞ்ச பைரவர்களை வழிபாடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Read More
கொட்டையூர்  கோடீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால், பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப் பாவம் கோடி அளவு பெருகிவிடும். அதே போல புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் புண்ணியம் கோடி அளவு கூடிவிடும்.

விளையாட்டில் உன்னத நிலையை அடைய அருளும் அம்பிகை

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், அத்துறையில் உன்னத நிலையை அடையவும், பரிசுகள் பெறுவதற்காகவும் இந்த பந்தாடுநாயகி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

Read More
நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

நன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்

குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும் தலம்

குபேரன் புதல்வர்கள் பொன் வில்வ சாரரத்தால் வழிபட்ட தலம்

திருச்சியிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது நன்னிமங்கலம். இத்தலத்தில் அமைந்துள்ளகு, 1200 ஆண்டுகள் பழமையான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் சுந்தரேஸ்வரர். இறைவியின் திருநாமம் மீனாட்சி. இந்த ஆலயத்தை பக்தர்கள் சென்னி வாய்க்கால் கோயில் என்றே அழைக்கின்றனர். பிரம்மா இங்கு சிவனை தன் தலைகளால் (சென்னி) வணங்கி வரம் பெற்றதால் இத்தல இறைவன் சென்னி சிவம் என்றே அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இதுவே சென்னி வளநாடு எனப் பெயர்கொண்டு, தற்போது சென்னிவாய்க்கால் கோயில் என்றானது. கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர், ஐந்தடி உயர லிங்கத்திருமேனியில், கரும்பச்சை நிறத்தில் மரகத மேனியராய் ஜொலிக்கிறார். இவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

பொன்னாலாகிய மூன்று தளத் தொகுதியுடைய பொன் வில்வ சாரம், யோக தவ ஜப சக்திகளைப் பெற்றிருப்பவர்களைத் தவிர வேறு எவர் கண்களுக்கும் தென்படாது. மகிமைமிக்க பொன்வில்வ சாரத்தை சிவபெருமான் குபேரனிடம் அளித்தார். குபேரன் இதை தன் குமாரர்களான மணிக்ரீவன், நளகூபன் இருவரிடமும் அளித்து பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்க மூர்த்திகளில் வைத்து வழிபட்டு அதன் மகிமையை அறிந்துவரும்படி கட்டளையிட்டார்.

அவ்வாறே அவர்கள் வழிபட, அந்த பொன்வில்வசாரம் பல இடங்களில் பசுமையாக சாதாரண வில்வ தளம் போல் காட்சி தர, சில இடங்களில் மறைந்து விட்டது. பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் திகழும் திருவண்ணாமலை வந்தடைந்தனர். பௌர்ணமி அன்று கிரிவலம் வந்து பொன்வில்வ சாரத்தை அண்ணாமலை ஆண்டவன் பாதங்களில் வைத்து 'ஓம் நமசிவாய' மந்திரத்தை ஓதினர். அண்ணாமலையாரிடம் வில்வதளம் சுவர்ணமாகப் பிரகாசித்தது. சென்னிவளநாடு செல்லும்படி அவர்களுக்கு அண்ணாமலையார் அசரீரியாய் அருள் வழிகாட்டினார்.

அதன்படி இருவரும் திருத்தவத்துறை என்ற தற்போதைய லால்குடியில் உள்ள சப்தரீஷிஸ்வரர் ஆலயத்திற்கு வந்தனர். அங்கிருந்த சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி நீராடிய அவர்கள் அருகில் வேறொரு ஆலயம் இருப்பதைக் கண்டனர். அதேசமயம் தங்கள் கரத்திலிருந்த பொன்வில்வசாரம் மறைந்தது கண்டு பதறினர். உடனே அந்த ஆலய கருவறை நோக்கிச் சென்றனர். அங்கே கரும்பச்சை வண்ணத்தில் மரகதமாய் ஜொலிக்கும் சுயம்பு லிங்கத்திருமேனியில் தாங்கள் கொண்டு வந்த பொன்வில்வசாரம், பன்மடங்காகப் பெருகி மணம் வீசக்கண்டனர்.

அவை ஸ்வர்ணவில்வ தளங்களாக மஞ்சள் நிறத்தில் ஜொலித்தன. இருவரும் மெய் சிலிர்த்து 'ஓம் நமசிவாய' என ஓதி அர்ச்சிக்க, அது மேலும் பொங்கிப் பெருகியது. இருவரும் மன பூரிப்போடு தேவலோகம் சென்றனர். தன் புதல்வர்கள் பொன்வில்வ சாரத்தின் மகிமையையும் தேவரகசியத்தையும் உணர்ந்ததை அறிந்த குபேரன் மனம் மகிழ்ந்தார். சென்னி வளநாட்டிற்கு வந்து மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபட்டார்.

பௌர்ணமி அன்று இத்தலவிருட்சமான பொன்வில்வ மரத்திற்கு அரைத்த சந்தனம் மஞ்சள் குங்குமம் சாத்தி, அடிப்பிரதட்சனம் செய்து இறைவன் இறைவியை வழிபட்டால் குபேரன் மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

Read More
தலத்தின் தனிச்சிறப்பு

தலத்தின் தனிச்சிறப்பு

ஒரே சிவாலயத்தில் இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் திருவாரூர், திருப்புகலூர், திருமீயச்சூர் ஆகிய மூன்று தலங்களுக்கும் ஒரு தனித்துவம் உண்டு.இந்த மூன்று தலங்களில் தான் ஒரு கோயிலுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு சிவன் சன்னதிகள் தேவாரப் பாடல்கள் பாடப் பெற்றுள்ளன.

இதில் திருவாரூர் தலத்தில் வன்மீகநாதர் மற்றும் அசலேஸ்வரர், திருப்புகலூர் தலத்தில் அக்னிபுரீஸ்வரர் மற்றும் வர்த்தமானீஸ்வரர், திருமீயச்சூர் தலத்தில் மேகநாதர் மற்றும் சகலபுவனேஸ்வரர் ஆகிய மூலவர்கள் மேல் தேவாரப் பாடல் பாடப்பட்டிருக்கிறது.

Read More
திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில்

இழந்த சொத்துக்களை மீட்டுத் தரும் திவ்ய தேசம்

ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மூலவராக வைத்தமாநிதி பெருமாளும், அவரின் வலதுபுறத்தில் குமுதவள்ளியும், இடதுபுறம் கோளூர்வல்லி தாயாரும் அருள்பாலிக்கிறார்கள்.

ஒரு சமயம், பார்வதியால் குபேரனுக்கு சாபம் உண்டாயிற்று .இதனால் குபேரனிடம் இருந்து நவநிதிகளான, சங்கநிதி, பதுமநிதி, மகரநிதி, கச்சபநிதி, மகுடநிதி, நந்தநிதி, நீலநிதி, கர்வநிதி மற்றும் மஹாபதுமநிதி ஆகிய ஒன்பது வகைச் செல்வங்களும் விலகிச் சென்றன. அந்த நவநிதிகள் பெருமாளிடம் சென்றடைந்தன. பெருமாள் இந்த நவநிதிகளின் மீது சயனம் கொண்டு அவற்றை பாதுகாத்து வைத்திருந்ததால் அவருக்கு வைத்தமாநிதி பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. பெருமாள், இத்தலத்தில் தனது வலது தோளுக்கு கீழ் நவநிதிகளை பாதுகாத்து வருவதாக ஐதீகம் இத்தலத்து பெருமானை வழிபட்டு குபேரன், மீண்டும் நவநிதிகள் பெற்றதாக தல புராணங்கள் கூறுகின்றன. குபேரனுக்கு காட்சியளித்து சாபவிமோசனமருளியதுடன், அவன் இழந்த நிதிகளில் ஒரு பகுதியை மரக்காலால் அளந்து குபேரனுக்கு திருப்பி அளித்தார். பெருமாள் நவநிதிகளை பாதுகாத்து வருவதை இன்றும் நாம் தரிசிக்கலாம். கருவறையில் வைத்தமாநிதி பெருமாள், ஆதிசேஷன் மீது புஜங்க சயனத்தில், வலக்கையை நீட்டியவாறு, குபேரனுக்கு செல்வங்களை அளந்து கொடுத்த மரக்காலைத் தன் தலைக்கு வைத்தும், கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்கு எவ்வளவு உள்ளது என கணக்குப் பார்க்கும் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

செவ்வாய் கிரக தோஷ நிவர்த்தி தலம்

பாண்டிநாட்டு நவ திருப்பதியில் இது மூன்றாவது திருப்பதி. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரக தலங்களுக்கு ஒப்பாக இப் பாண்டிநாட்டு நவதிருப்பதிகள், நவகிரக தலங்களாக போற்றப்படுகிறது. நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களில் உள்ள பெருமாளை, நவ கிரகங்களாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது.

நவக்கிரகத்தில் இது செவ்வாய் ஸ்தலமாகும். செவ்வாய் கிரகத்தால் தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

ஒவ்வொரு மாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் சுவாதி நட்சத்திரத்தன்று குளித்து, பெருமாளை முழுமனதுடன் வேண்டினால் இழந்த சொத்துக்கள், தோஷ நிவர்த்திகள் விலகும் என்பது ஐதீகம். இந்த நட்சத்திர நாளில்தான் குபேரன் திருப்பதிக்கு கடன் கொடுத்ததாக வரலாறு கூறுகிறது.

நீராஞ்சனம் விளக்கு வழிபாடு

அனைத்து மாதங்களிலும் செவ்வாய் மற்றும் சனி கிழமைகளில் நீராஞ்சனம் எனும் விளக்கு ஏற்றப்படுகிறது. இந்த விளக்கானது அரிசி, தேங்காய் மற்றும் நெய் ஆகிய 3-ம் சேர்ந்து உருவாக்கப்பட்டதாகும். இவ்வாறாக 3 வாரம் தொடர்ந்து ஏற்றினால் வேண்டிய வரங்கள் கிடைப்பதால் அனைத்து பக்தர்களும் அதனை திரளாக செய்து வருகின்றனர். கன்னிப்பெண்கள் திருமண வரம் வேண்டியும், மணமுடித்தவர்கள் குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் அமைதி நிலவவும், சொத்துக்கள் அதிக அளவில் கிடைக்கவும் வேண்டி இவ்வாறாக விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.

Read More
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கர தாடகங்களின் சிறப்பு

திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள், அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார். இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார். அன்னையின் தாடகங்கள் ஸ்ரீசக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கிறாள். அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்பிகையை தரிசித்து வழிபட செல்வம், வீரம், கல்வி ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன வேத சாஸ்திரங்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

Read More
கழுகுமலை வெட்டுவான் கோவில்

கழுகுமலை வெட்டுவான் கோவில்

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாண்டியர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட, 1200 ஆண்டு பழமையான இக்கோவில், கோவில்பட்டியிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தென் தமிழகத்தின் எல்லோரா

பொதுவாக ஒரு கோயிலோ அல்லது வீடோ கட்டும் போது அஸ்திவாரம் போட்டு கீழிருந்து மேலாக கட்டுவார்கள், ஆனால் இந்த குடை வரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால், மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. அதாவது முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த ஒற்றைக் கற்றளி கோவில் , தனி ஒரு பாறையை மேலிருந்து கீழ்நோக்கி செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில் போன்று, கடினமான பாறை அடுக்குகளால் ஆன ஒரு பெரிய மலைப்பாறையில், 7.50 மீட்டர் ஆழத்திற்குச் சதுரமாக வெட்டியெடுத்து அதன் நடுப்பகுதி பாறையை கோயிலாக செதுக்கியுள்ளனர். இதை வெட்டுவான் கோயில் என அழைக்கின்றனர். ஒரு தனிக் கோயில் எப்படியெல்லாம் கருவறை, அர்த்தமண்டபம் என்று அமைக்கப்படுமோ, அதேபோன்று ஒற்றைப் பாறையிலே எழுப்பப்பட்ட அதிசயம் இந்தக் கோயில். தென் தமிழகத்தின் எல்லோரா என்று போற்றப்படும் இக்கோயிலை வெளிநாட்டினர் ஏராளமானோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த மலை தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. விமானத்தின் முதல் தளத்தில் தட்சிணாமூர்த்தி, திருமால், விசாபகரணர், அக்கமாலையை கையில் ஏந்தி சன்னவீரம் தரித்த முருகன், சந்திரன், சூரியன் சிற்பங்கள் உள்ளன. கிரீடத்தில் உமா மகேஸ்வரர், மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி, நரசிம்மர், பிரம்மா உள்ளனர்.

மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி

இந்தியக் கோயில்களில், இந்தக் கோயிலில் மட்டுமே மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. அவர் தமது முன் இடக்கரத்தில் மிருதங்கத்தைப் பிடித்திருக்கும் நிலையிலும், முன் வலக்கரத்தின் விரல்களால் மிருதங்கததை இசைக்கும் பாவனையிலும் அருள்புரிகிறார். மிருதங்கம் நடனத்துடன் தொடர்புடையது ஆதலால் இங்கே தட்சணாமூர்த்தி நடனக் கலையின் சிறப்பாய் உள்ளார்.

இங்குள்ள கழுகுமலை முருகன் கோயிலும் ஒரு குடைவரைக் கோயிலாகும்.

கழுகுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

முருகப்பெருமான் ராஜபோகமாக வீற்றிருக்கும் தலம்

https://www.alayathuligal.com/blog/pgadjte6w3sdjygdbbkmwr56wnx5cr?rq

Read More
பொரவாச்சேரி கந்தசாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பொரவாச்சேரி கந்தசாமி கோவில்

அழகு மிளிரும் முருகப்பெருமானின் அபூர்வ திருமேனி

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் தலத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது பொரவாச்சேரி கந்தசாமி கோவில்.

முருகன் என்றால் அழகு. அதற்கேற்றாற்போல் சொக்க வைக்கும் அழகுடன் முருகப்பெருமான், ,இத்தலத்தில் கந்தசாமி என்ற திருநாமத்துடன் வள்ளி, தெய்வயானை சகிதமாக அருள் பாலிக்கிறார். இவர் ஆறுமுகங்களும், பன்னிரண்டு திருக்கரங்களும், கொண்டு, அலங்கார ஆபரணம் அணிந்து மயில் மீது அமர்ந்திருக்கும் இந்த முருகப்பெருமானின் விக்கிரகம் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. சிலாமூர்த்தத்தின் முழு எடையையும், அதாவது முருகப்பெருமான், மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் அந்த மயிலின் கால்கள் தாங்கி உள்ளன என்பது வியப்பாக உள்ளது. மேலும் வியப்பளிக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் ஆறுமுகப் பெருமானின் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இங்குள்ள சன்னதியின் அமைப்பின் காரணமாக நாம் மிக அருகில் சென்று மயிலின் கால் நகம், முருகப்பெருமானின் இடது புறங்கையில் ஓடும் பச்சை நரம்பு உட்பட அனைத்து சிறப்பம்சங்களையும் தரிசிக்க முடியும்.இத்தகைய அழகு மிளிரும் சிற்பத்தை நாம் காண்பது அரிது.

பொரவாச்சேரி முருகப்பெருமான் சிலையை வடித்த அதே சிற்பிதான், எட்டுக்குடி மற்றும் எண்கண் தலங்களுக்கும் இதே போன்ற ஒரே கல்லிலான மயில் மேல் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் சிலையை வடித்துக் கொடுத்திருக்கிறார்.

செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்

செவ்வாய் தோஷம் நீங்கவும்,குழந்தை பாக்கியம் கிடைக்கவும், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கவும், சத்துருக்களின் தொல்லை நீங்கவும் இங்கே உரியமுறையில் வழிபாடுகள் செய்யப்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்கச் செவ்வாய்க்கிழமையன்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க இக்கோயிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சத்ரு சம்ஹார ஹோமம் செய்யலாம்.

குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையன்று பாலபிஷேகம் செய்து செவ்வரளி மலர் சாத்தி செவ்வாழை பழத்தோடு அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் மூலமாகக் கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Read More