விநாயகர்

விநாயகர் சிவபெருமான் பார்வதியின் மூத்த மகன் ஆவார்.இவர், யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக விளங்குபவர். விநாயகரே முழு முதற்கடவுள் ஆனதால், எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் வெற்றிகரமாக எந்த தடையும் இன்றி நிறைவேற விநாயகரை முதலில் வழிபடுகிறோம்.ஆலயங்களில் கூட, உள்ளே நுழைந்ததும் நாம் வணங்குகிற முதல் தெய்வம், முதல் கடவுள் விநாயகப் பெருமானாகத்தான் அமைந்திருக்கிறார். இவரை வழிபட ஆலயத்திற்குச் சென்றுதான் வழிபட வேண்டும் என்பதில்லை.அரசமரத்தடி, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, தெருமுனை போன்ற இடங்களில் இருந்து கொண்டு நமக்கு அருள் பாலிக்கிறார் பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது, மண், பசுஞ்சாணம், மஞ்சள், அரைத்த சந்தனம், வெண்ணீறு, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத்தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நம் கிராமப்புறங்களில் சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். நாம் இவரை சாதாரண தோற்றத்தில் உருவாக்கினாலும் நம் ஆலயங்களில் இவர் பல அதிசயமான அபூர்வமான தோற்றங்களில் காட்சி கொடுக்கிறார். விநாயகர்  ஆலயங்களைப்  பற்றிய கதைகளையும் தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்..

விநாயகர் சிவபெருமான் பார்வதியின் மூத்த மகன் ஆவார்.இவர், யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக விளங்குபவர். விநாயகரே முழு முதற்கடவுள் ஆனதால், எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் வெற்றிகரமாக எந்த தடையும் இன்றி நிறைவேற விநாயகரை முதலில் வழிபடுகிறோம்.ஆலயங்களில் கூட, உள்ளே நுழைந்ததும் நாம் வணங்குகிற முதல் தெய்வம், முதல் கடவுள் விநாயகப் பெருமானாகத்தான் அமைந்திருக்கிறார். இவரை வழிபட ஆலயத்திற்குச் சென்றுதான் வழிபட வேண்டும் என்பதில்லை.அரசமரத்தடி, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, தெருமுனை போன்ற இடங்களில் இருந்து கொண்டு நமக்கு அருள் பாலிக்கிறார் பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது, மண், பசுஞ்சாணம், மஞ்சள், அரைத்த சந்தனம், வெண்ணீறு, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத்தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நம் கிராமப்புறங்களில் சொல்லுவார்கள். புற்றுமண், அரைத்தமாவு ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். நாம் இவரை சாதாரண தோற்றத்தில் உருவாக்கினாலும் நம் ஆலயங்களில் இவர் பல அதிசயமான அபூர்வமான தோற்றங்களில் காட்சி கொடுக்கிறார். விநாயகர் ஆலயங்களைப் பற்றிய கதைகளையும் தகவல்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்..