தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்

தம்பதியர்க்கு கருத்து ஒற்றுமையை அருளும் முருகப்பெருமான்

தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இத்தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். நடுவில் முருகன் நின்றிருக்க, வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் எழுந்தருளியிருக்கிறார்கள். இந்த அமைப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, அவர்கள் வாழ்வில் அன்னியோன்யம் வளர்ந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.

ஆலயத்தில் பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. இங்குள்ள விஷ்ணு துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும். இக்கோயிலில் இன்னொரு சிறப்பு - ஜுரதேவர்! இவருக்கு மிளகு அபிஷேகம் செய்து, காய்ச்சல் போன்ற நோய்களில் இருந்து பக்தர்கள் உடனடி நிவாரணம் பெறுகிறார்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி

https://www.alayathuligal.com/blog/jafy4l7743sl49adbja5zkh8876dz9

 
Previous
Previous

நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்

Next
Next

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்