முருகன்

முருகப் பெருமான் சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு இளைய மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்து நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன. தமிழ் மக்களே முருகப்பெருமானை அதிகம் வழிபடுபவர்கள்.அதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். பண்டைய காலத்தில் முருகன் வழிபாடு கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்தது.பின்பு அது இந்த சமயத்துடன் இணைந்தது. பண்டைக்காலத்தில் புலவர்கள் தமக்கு பொருள் கொடை அளித்த மன்னர்களை மற்ற புலவர்களும் அணுகி பயன்பெற வேண்டும் என்பதற்காக அந்த மன்னர்களின் சிறப்பை நூலாகவே எழுதி விடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த முருகக் கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக புலவர் நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்கு, மக்களைச் செல்லுமாறு புலவர் ஆற்றுப்படுத்துகிறார்.அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.அதுபோல முருக பக்தரான அருணகிரிநாதர்.முருகப் பெருமானை போற்றி திருப்புகழ் பாடிய தலங்கள் திருப்புகழ் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. முருகப்பெருமானின் அருள் சிறப்பையும், அறுபடை வீடுகள் மற்றும் திருப்புகழ் தலங்கள் பற்றிய விசேட தகவல்களை அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.

முருகப் பெருமான் சிவன்- பார்வதி தம்பதிகளுக்கு இளைய மகனாவார். சிவபெருமான் தனது முகத்திலிருந்து நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்துசமய நூல்கள் கூறுகின்றன. தமிழ் மக்களே முருகப்பெருமானை அதிகம் வழிபடுபவர்கள்.அதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். பண்டைய காலத்தில் முருகன் வழிபாடு கௌமாரம் எனும் தனித்த மதமாக இருந்தது.பின்பு அது இந்த சமயத்துடன் இணைந்தது. 

பண்டைக்காலத்தில் புலவர்கள் தமக்கு பொருள் கொடை அளித்த மன்னர்களை மற்ற புலவர்களும் அணுகி பயன்பெற வேண்டும் என்பதற்காக அந்த மன்னர்களின் சிறப்பை நூலாகவே எழுதி விடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த முருகக் கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக புலவர் நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்கு, மக்களைச் செல்லுமாறு புலவர் ஆற்றுப்படுத்துகிறார்.அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.அதுபோல முருக பக்தரான அருணகிரிநாதர்.முருகப் பெருமானை போற்றி திருப்புகழ் பாடிய தலங்கள் திருப்புகழ் தலங்கள் என்று போற்றப்படுகின்றன. 

முருகப்பெருமானின் அருள் சிறப்பையும், அறுபடை வீடுகள் மற்றும் திருப்புகழ் தலங்கள் பற்றிய விசேட தகவல்களை அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.