பெருமாள்

இந்து சமயத்தின் முக்கியமான மூன்று தெய்வங்களில  மகா விஷ்ணுவும் ஒருவர்.இவர் இந்து சமயத்தின் ஒரு அங்கமான வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார்.மும்மூர்த்திகளில்,மூவுலகையும் காக்கும் தொழிலை செய்கின்றார்.இவர் பிறப்பும்,இறப்பும் இல்லாத பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன்,பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இவருக்கு நாராயணன,திருமால்,பெருமாள் என்று பல பெயர்கள் உண்டு.உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது,மகா விஷ்ணு தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று வைணவ சமயம் கூறுகிறது.அப்படி அவர் எடுத்த அவதாரங்களை தசாவதாரம் என்கின்றனர்.இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது.விஷ்ணுவையும் அவரது பராக்கிரமத்தையும் போற்றி 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப் போற்றபடுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது. மகா விஷ்ணு பக்தர்களுக்கு அருளிய   கதைகளையும்,திவ்ய தேசங்கள்  மற்றும் பிற வைணவத்தலங்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.

இந்து சமயத்தின் முக்கியமான மூன்று தெய்வங்களில  மகா விஷ்ணுவும் ஒருவர்.இவர் இந்து சமயத்தின் ஒரு அங்கமான வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார்.மும்மூர்த்திகளில்,மூவுலகையும் காக்கும் தொழிலை செய்கின்றார்.இவர் பிறப்பும்,இறப்பும் இல்லாத பரம்பொருளாக இருப்பதால் பரப்பிரம்மன்,பரமாத்மா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இவருக்கு நாராயணன,திருமால்,பெருமாள் என்று பல பெயர்கள் உண்டு.உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது,மகா விஷ்ணு தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அவதாரங்கள் எடுப்பார் என்று வைணவ சமயம் கூறுகிறது.அப்படி அவர் எடுத்த அவதாரங்களை தசாவதாரம் என்கின்றனர்.இதிகாசங்களான மகாபாரதம் இவருடைய கிருஷ்ண அவதாரத்தினையும், இராமாயணம் இராம அவதாரத்தினையும் விளக்குகிறது.

விஷ்ணுவையும் அவரது பராக்கிரமத்தையும் போற்றி 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடப்பட்ட சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் திவ்ய தேசம் எனவும், திவ்ய தேசங்களைப் பற்றிய பாடல்கள் மங்களாசனம் எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசனம் பெற்ற திருத்தலங்கள் 108 ஆகும். அவையே 108 திவ்ய தேசங்கள் எனப் போற்றபடுகின்றன. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேபாளத்திலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. இவற்றைத் தவிர மற்ற 106 தலங்களுக்கும் தம் வாழ்நாளில் சென்று அத்தலத்திற்குரிய பாடல்களைப் பாடுதல் ஒரு வைணவ சமய வழிபாடாக உள்ளது.

 மகா விஷ்ணு பக்தர்களுக்கு அருளிய   கதைகளையும்,திவ்ய தேசங்கள்  மற்றும் பிற வைணவத்தலங்களைப் பற்றிய அரிய தகவல்களை அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.