ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்

குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலம்

கும்பகோணத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் ஆலங்குடி. தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் இந்த இடத்திற்கு ஆலங்குடி என்று பெயர் வந்தது. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் ஏலவார்குழலி.

இத்தலம் சிறந்த குரு தட்சிணாமூர்த்தி பரிகார தலமாக விளங்குகிறது. இந்த தலத்தில் சிறப்புடைய குரு தட்சிணாமூர்த்தி, இறைவனின் தெற்கு சுற்றுச் சுவரில் எழுந்தருளியுள்ளார். தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது தமிழ்நாட்டிலேயே இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பாகும். சித்ரா பௌர்ணமி அன்று பத்து நாள் உற்சவ விழாவும், தட்சிணாமூர்த்திக்குத் தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது.

குரு தட்சிணாமூர்த்தியை 24 முறை வலம் வந்து 24 நெய் தீபங்கள் ஏற்றி வழிபட குரு தோஷங்கள் நீங்கி நன்மை பெறலாம் என்பது ஐதீகம். குருபகவானுக்கு முல்லை மலரால் அர்ச்சனை, மஞ்சள் வஸ்திரம் சாத்துதல், கொண்டைக்கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியங்களுடன் சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் பாலாபிஷேகம், குரு ஹோமம் செய்ய சகல தோஷங்களும் நிவர்த்தியாகி அவருடைய அருள் கிடைக்கும்.

வாரந்தோறும் வியாழக்கிழமை, தினசரி வரும் குரு ஹோரை மற்றும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் குரு பகவானை வழிபடுதல் சிறந்தது.

ஆலங்குடி குரு பெயர்ச்சி (2023)

 
Previous
Previous

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

Next
Next

தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்