லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில்

நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் காட்சி தரும் அம்பாள்

திருச்சியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தலம் லால்குடி. இறைவனின் திருநாமம் சப்தரிஷீஸ்வரர். ஏழு முனிவர்கள் வழிபட்டு பூஜைகள் செய்த திருத்தலம் என்பதால், இங்கே உள்ள ஈசனுக்கு சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது. இறைவியின் திருநாமம் பெருதிருப்பிராட்டியார், ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி.

அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந்திருக்கிறாள். எப்போதும், மடிசார் புடவையுடன், நித்திய கல்யாணியாக காட்சி தருகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

மகாலட்சுமி தாயார், இங்கு இந்தத் தலத்தில் கடும் தவம் புரிந்து மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டாள் என்கிறது தல புராணம். எனவே இந்தத் தலத்துக்கு வந்து, சப்தரிஷீஸ்வரரை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

இங்கு, அம்பாள், சரஸ்வதி, மகாலட்சுமி தாயார், துர்கை முதலானோருக்கு புடவை சார்த்தி வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள். கடன் முதலான தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள்.

 
Previous
Previous

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப் பெருமாள் கோவில்

Next
Next

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்