மாணிக்கவண்ணர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மாணிக்கவண்ணர் கோயில்

ரிஷப வாகனத்தில் விநாயகர்

மயிலாடுதுறை அருகில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாழ்கொளிபுத்தூர் ரத்தினபுரீஸ்வரர் ஆலயத்தில் காட்சி தரும் நடன விநாயகர், ரிஷப வாகனத்தில் இருக்கிறார். இது விநாயகரின் ஓர் அபூர்வமான காட்சியாகும்,

Read More
விருத்தபுரீசுவரர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

விருத்தபுரீசுவரர் கோயில்

ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம்

அறந்தாங்கியில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புனவாசல் தலத்தில, ஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள்.

Read More
உத்தராபதீசுவரர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

உத்தராபதீசுவரர் கோயில்

கணபதி சிவபெருமானை வழிபட்ட தலம்

கணபதி, கஜமுகாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொண்ட தலம்தான, கணபதீச்சுரம் என்னும் பெயருடைய திருச்செங்காட்டங்குடி. அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆனதனால் இத்தலத்திற்கு 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. .கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், ‘கணபதீஸ்வரர்' என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோஷங்களும், நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்

Read More
சத்தியவாகீசுவரர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சத்தியவாகீசுவரர் கோயில்

செவிசாய்க்கும் பிள்ளையார்

திருச்சிக்கு அருகில் இருக்கும் தேவாரப் பாடல் பெற்ற அன்பில் தலத்தில், பிள்ளையார் செவிசாய்த்துக் கேட்கும் நிலையில் இருக்கிறார. கொள்ளிடத்துத் தென்கரையில் நின்று திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைச் செவிசாய்த்துக் கேட்டதால், இவ்விநாயகர் 'செவிசாய்க்கும் பிள்ளையார்' எனப் பெயர் பெற்றார். பக்தர்களின் குறைகளைச் செவிசாய்த்துக் கேட்டுத் தீர்த்து வைப்பார் என்பதும், இப்பெயர் வரக் காரணமாகும்.

Read More
கச்சேரி விநாயகர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

கச்சேரி விநாயகர் கோயில்

கச்சேரி விநாயகர்

மதுராந்தகம் அருகே செய்யூர் என்ற ஊரின் மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் வீற்றிருக்கும். விநாயகருக்கு கச்சேரி விநாயகர் என்று பெயர். இந்தப் பிள்ளையார் ஒருபுறம் சற்றே சாய்ந்து தாளம் போடுவது போன்ற பாவனையுடன் காணப்படுவதால் இவருக்குக் கச்சேரி விநாயகர் எனும் பெயர் வந்தது. ‘கோடை அபிஷேகம் ’என்ற பெயரில், இவருக்கு சித்திரை மாதம் முழுவதும் தினசரி இளநீர்அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் நடைபெறுகிறது.

Read More
மகாதேவர் கோயில்
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மகாதேவர் கோயில்

நிறம் மாறும் அதிசய விநாயகர்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில், சிவபெருமானுக்கு கோவில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார, ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது. இவர் நிறம் மாறுவதற்கேற்ப அங்குள்ள அரச மரமும் கிணற்று நீரும் நிறம் மாறும் அதிசயம் நிகழ்கிறது. இந்த விநாயகர் வெள்ளை நிறத்தில் உள்ள போது, இங்குள்ள கிணற்று நீர் கருப்பு நிறமாக மாறுகிறது. விநாயகர் கருப்பு நிறமாக மாறும் போது, கிணற்று நீர் நுரை நுரையாக பொங்கி வெண்மையாக மாறி விடுகிறது. இந்த காலகட்டத்தில் இந்த கிணற்றில் தரையை தெளிவாக பார்க்க முடியும்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மத்தங்கரை விநாயகர் கோயில்

கோடரி ஏந்திய விநாயகர்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகிலுள்ள பூலாம்பட்டி மத்தங்கரையில் உள்ள விநாயகர்,கோடரி ஏந்திய நிலையில் உள்ளார். உழைப்பின் அவசியத்தை உணர்த்தும்வகையில் இவர் கோடரி ஏந்தி உள்ளார்.ஒரு மரத்தையே கோடரி சுள்ளிகளாக நொறுக்குவது போல்,இவர் பக்தர்களின் குறைகளை அடித்து நொறுக்குபவராக உள்ளதால், இந்த ஆயுதத்தை ஏந்தியுள்ளார்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

தலைவெட்டி விநாயகர் கோயில்

தலைவெட்டி விநாயகர்

திண்டுக்கல் அருகேயுள்ள மேலைக் கோட்டையூர் ஆலயத்தில் 'தலை வெட்டி விநாயகர்’ உள்ளார்.ஒரு காலத்தில் இந்த பிள்ளையாரின் சிரசில்'தன் தலையை நீக்கித் தனத்தை எடு' என்று ஒரு வாசகம் இருந்ததாம்.அதன் படி விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம்.அதற்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து குளம்,கோவில் கிணறு வெட்டப் பயன்படுத்தினார்களாம்.அதனால் அவர் தலைவெட்டி விநாயகர் எனப் பெயர் பெற்றார்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

சிரட்டைப் பிள்ளையார் கோயில்

சிரட்டைப்(கொட்டாங்குச்சி) பிள்ளையார்

நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.இங்கு தேங்காய் விடலை போட்டால்,சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும்,தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்

Read More
vinayakar, விநாயகர் Alaya Thuligal vinayakar, விநாயகர் Alaya Thuligal

சர்ப்ப விநாயகர் கோயில்

சர்ப்ப விநாயகர்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ளது. ஸ்ரீசர்ப்பவிநாயகர் கோவில்.இவருக்கு சர்ப்பம்,தன் ஐந்து தலைகளுடன் குடையாக விளங்குகிறது.விநாயகரின் உடலில் ஐந்து பாம்புகள் அணிகலன்களாக உள்ளன.ராகு கேது தோஷங்கள் இவரை வழிபட நீங்கும்.

Read More
பகவத் விநாயகர் கோயில்
vinayakar, விநாயகர் Alaya Thuligal vinayakar, விநாயகர் Alaya Thuligal

பகவத் விநாயகர் கோயில்

நவக்கிரக விநாயகர்

கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோயிலில் நவக்கிரக விநாயகர் அருள்கிறார்.இவர் சூரியனை நெற்றியிலும்,சந்திரனை நாபிக் கமலத்திலும்,செவ்வாயை வலது தொடையிலும்,புதனை வலது கீழ்க் கையிலும்,வியாழனை சிரசிலும்,வெள்ளியை இடது கீழ்க் கையிலும்,சனியை வலது மேல் கையிலும்,ராகுவை இடது மேல் கையிலும்,கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சி தருகிறார்.இவரை வழிபட்டால் நவக்கிரக தோஷம் தீரும் என்பர்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

முந்தி விநாயகர் கோயில்

தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய விநாயகர்

கோயம்புத்தூர் டவுனில் புலிக்குளம் பகுதியில் எழுந்தருளியுள்ள முந்தி விநாயகர்தான் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆவார்.இவர் 10 அடி 10 அங்குலம் உயரத்துடனும்,11அடி10 அங்குலம் அகலத்துடனும்,8 அடி சுற்றளவுடனும்,190 டன் எடை உள்ளவராகவும் இருக்கிறார்.இவர் வலம் சுழித்த தனது தும்பிக்கையில் அமுத கலசம் ஏந்தி இருக்கிறார்

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மாணிக்க விநாயகர் கோயில்

முப்பத்திரண்டு விநாயகர்கள் காட்சி தரும் கோவில்

திருச்சி மலைக்கோட்டை நுறைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மணக்குள விநாயகர் கோயில்

விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ள கோவில்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வேறு எந்த விநாயகர் கோவிலிலும் இல்லாத வகையில்,விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் இந்த பள்ளியறைக்குச் செல்வார்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

செல்வ விநாயகர் கோயில்

ஓங்கார வடிவில் விநாயகர்

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோவில் . இங்கு பதினோரு சுயம்பு பிள்ளையார்கள், ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள். பதினாறு செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் தேவையான பதினோரு செல்வங்களை இந்த விநாயகர்கள் அள்ளித் தருகிறார்கள்

Read More
vinayakar, விநாயகர் Alaya Thuligal vinayakar, விநாயகர் Alaya Thuligal

ஹேரம்ப விநாயகர் கோயில்

ஹேரம்ப விநாயகர்

திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.

Read More