Perumal, பெருமாள் Alaya Thuligal Perumal, பெருமாள் Alaya Thuligal

உலகளந்த பெருமாள் கோயில்

பெருமாள் சங்கு சக்கரத்தை வி்த்தியாசமாக ஏந்தியிருக்கும் தலம்

எல்லா வைணவத் தலங்களிலும் பெருமாள் சக்கரத்தை வலது கையிலும் சங்கை இடது கையிலும் ஏந்தியிருப்பார்.ஆனால் 108 திவ்ய தேசங்களளில் ஒன்றான திருக்கோவிலூரில்,திரிவிக்கிரமன் என்ற பெயரோடு, காலை உயர்த்தி உலகளந்த கோலத்தில் காட்சித் தரும் பெருமாள், வித்தியாசமாக சக்கரத்தை தனது இடது கையிலும் சங்கை வலது கையிலும் தரித்திருக்கிறார்.

Read More
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில்

பெருமாள் பாதணிகள்

ஸ்ரீவில்லிப்புக்தூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள திருவண்ணாமலை என்னும் ஊரில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் உள்ளது.இவர் ஆண்டாளை திருமணம் செய்வதற்காக திருப்பதியிலிருந்து வந்து இங்கு எழுந்தருளியிருக்கிறார்.இவர் திருப்பதி பெருமாள் போலவே தோற்றமளிக்கிறார்.

இப்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மிகப் பெரிய தோல் பாதணிகள் செய்து வந்து கோவில் பிரகாரத்தில் வைக்கிறார்கள்.சில நாட்களில் இப்பாதணிகள் பயன்படுத்தப்பட்டதைப் போல தேய்ந்த நிலையில் காணப்படுகின்றன.பெருமாளே இப்பாதணிகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.அதனால் இவற்றைத் தங்கள் தலையிலும் உடம்பிலும் ஒற்றிக் கொள்கிறார்கள்.

Read More

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்

நடராஜப் பெருமான் பொதுவாக தன் வலது காலை முயலகன் மீது ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் தான் எல்லா சிவாலயங்களிலும் காட்சி தருவார்.ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு பாண்டிய மன்னன் ஒரே காலில் நிற்பது நடராஜப் பெருமானுக்கு வலிக்குமே என்று ஆதங்கப் பட்டதால்,தன் இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில், வெள்ளியம்பலத்தில் காட்சி தருகிறார்.

Read More
தில்லை நடராசர் கோயில்

தில்லை நடராசர் கோயில்

சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்

சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.

பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.

இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.

Read More

சகல தீர்த்தமுடையவர் கோவில்

விசேடத் தீர்த்தம்

இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் சகல தீர்த்தமுடையவர்.இறைவி பெரியநாயகி. இத்தலத்து தீர்த்தமான கடலில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Read More
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அனந்தபத்மநாபன் கோவில்

திருவனந்தபுரம் அனுமன் வெண்ணெய் காப்பு

திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன் ஆலயத்தில் மூலவர் எதிரில் ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார். இவருக்கு பக்தர்கள் வெண்ணெய் சாற்றி வழிபடுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர் மீது சாற்றப்படும் வெண்ணெய் எவ்வளவு நாட்களானாலும் உருகுவதுமில்லை.வெய்யில் காலங்தளில் கெட்டுப் போவதுமில்லை.

Read More
Murugan, முருகன் Alaya Thuligal Murugan, முருகன் Alaya Thuligal

சத்தியகிரீஸ்வரர் கோயில்

முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் இருக்கும் அறுபடை வீடு

அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் திருப்பரங்குன்றத்தில்தான் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார்.மற்ற அறுபடை வீடுகளில் அவர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மாணிக்க விநாயகர் கோயில்

முப்பத்திரண்டு விநாயகர்கள் காட்சி தரும் கோவில்

திருச்சி மலைக்கோட்டை நுறைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க விநாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மணக்குள விநாயகர் கோயில்

விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ள கோவில்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வேறு எந்த விநாயகர் கோவிலிலும் இல்லாத வகையில்,விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் இந்த பள்ளியறைக்குச் செல்வார்.

Read More
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

ரங்கநாதர் கோவில்

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திவ்யதேசம்

வைணவர்களுக்கு கோவில் என்றால் அது ஸ்ரீரங்கத்தைத்தான் குறிக்கும்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் , ‘பூலோக வைகுண்டம்’ என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில்,ஸ்ரீரங்கம் முதன்மைத் தலமாகப் போற்றப்படுகின்றது.பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஒரே திவ்ய தேசம் என்ற தனிச் சிறப்பைக் கொண்டது ஸ்ரீரங்கம்.

Read More
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்

ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய தல விருட்சங்கள்

தென்காசியிலிருந்து சுமார் 11 கி.மீ, தூரத்திலுள்ள ஆய்க்குடி கிராமத்திலுள்ளது பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது. மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி பாலகனாக ஒரு முகத்துடனும்,நான்கு கரங்தளுடனும் தாமரைப் பூவின் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய ஐந்து விருட்சங்கள் சேர்ந்த பஞ்ச விருட்சம் இக்கோவிலின் தலவிருட்சமாக உள்ளது. ஐந்து விருட்சங்களும் ஐந்து கடவுளருக்குரியதாகக் கருதப்படுகிறது.இதில் அரச மரம் சூரியனுக்கும்,வேம்பு அம்பிகைக்கும்,கறிவேப்பிலை சிவனுக்கும், மாதுளை விநாயகருக்கும்,மாவிலங்கு விஷ்ணுவுக்கும் உரியதாகும்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

செல்வ விநாயகர் கோயில்

ஓங்கார வடிவில் விநாயகர்

வேலூர் மாவட்டம் சேண்பாக்கம் என்ற தலத்தில் அமைந்துள்ளது செல்வ விநாயகர் திருக்கோவில் . இங்கு பதினோரு சுயம்பு பிள்ளையார்கள், ஓங்கார வடிவில் காட்சி தருகிறார்கள். அதனால் இத்திருக்கோயிலை ‘பிள்ளையார் சபை’ என்று போற்றுகிறார்கள். பதினாறு செல்வங்களில் மனிதனுக்கு மிகவும் தேவையான பதினோரு செல்வங்களை இந்த விநாயகர்கள் அள்ளித் தருகிறார்கள்

Read More
vinayakar, விநாயகர் Alaya Thuligal vinayakar, விநாயகர் Alaya Thuligal

ஹேரம்ப விநாயகர் கோயில்

ஹேரம்ப விநாயகர்

திருத்தணி அருகில் உள்ள மின்னல் கிராமத்தில் இருக்கும் ஆலயத்தில் ஐந்து முகங்களோடு கருவறையில் சிம்ம வாகனத்தின் மீது அமர்ந்த நிலையில் பிரதான மூர்த்தியாக ‘ஹேரம்ப விநாயகர்’ அருளாட்சி புரிகிறார். இந்த சிம்ம வாகனத்தின் பார்வை பட்டால் விபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம் என்பது இங்குள்ளோரின் நம்பிக்கையாகும்.

Read More
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

காமாட்சி அம்மன் கோயில்

காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் தனிச்சிறப்பு

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது.காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சன்னதியாக கருதப்படுகிறது.

Read More