கண்ணாயிரநாதர் கோவில்

இழந்த பொருள்களை மீட்டுத் தரும் சொர்ணாகர்ஷண கால பைரவர்

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே, பிரதான சாலை ஓரத்திலேயே திருக்காரவாசல் கண்ணாயிரநாதர் கோவில் உள்ளது.

இத்தலத்தில் மூன்று பைரவர்கள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். இது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். காலை,மதியம், இரவு என்று மூன்று காலங்களிலும் வணங்க வேண்டிய மூன்று பைரவர்கள் அருகருகே இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். இவர்கள் முறையே காலை பைரவர், உச்சிகால பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றனர். மூன்று பைரவர்களுக்கு நேரெதிரில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாள். மகாலட்சுமி பார்த்துக் கொண்டே இருப்பதால், இவர்களை வணங்கினால் செல்வம் வந்து சேரும். இத்தலத்தில் அருள்பாலிக்கும் சொர்ணாகர்ஷண கால பைரவரை வழிபாடு செய்தால் இழந்த பொருள்களை மீண்டும் பெறலாம் என்பது ஐதீகம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

கடுக்காய் பிள்ளையார்

https://www.alayathuligal.com/blog/a49sn8ty3g4k9jhjw7pjh32jyc2trh

கண் நோய் தீர்க்கும் கண்ணாயிரநாதர்

https://www.alayathuligal.com/blog/s466acf59zxyfk58c9rf79ga2cddf2

சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/jgrjlakbwngmmac5llbatklc6kf9sy

 

படம் உதவி : திரு. மணி குருக்கள், நாகை

 
Previous
Previous

பழனியப்பர் கோவில்

Next
Next

ஆண்டளக்கும் ஐயன் கோவில்