வைத்தியநாதசுவாமி கோவில்

நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ள தேவாரத் தலம்

திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருமழபாடி. இறைவன் திருநாமம் வைத்தியநாதசுவாமி.

இந்த ஊருக்கு மழபாடி என்ற பெயர் வந்ததற்கு காரணம், சோழர் காலத்தில் அவர்களுக்கு உதவியாக சேரர் பிரிவான மழவர் படை பாசறை இங்கு அமைத்திருந்ததால் வந்ததென்றும், மேலும் மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர் பெற்று பின்னர் மழபாடி என்று பெயர் திரிந்ததாகவும் கூறுகின்றனர்.

இங்குள்ள பிரம்மனுக்கு எதிரில் நான்கு வேதங்களும் நான்கு நந்திகளாக அமர்ந்துள்ளன. இப்படி வேதங்கள் நந்திகளாக காட்சி தரும் கோலத்தை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

இக்கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

குழிகளை நவகிரகங்களாக பாவித்து வழிபடும் தேவாரத் தலம்

https://www.alayathuligal.com/blog/zxanx8brccrxdpff7fhandn4cyj3be

நாள் பட்ட சரும நோய்களைத் தீர்க்கும் அம்பிகை

https://www.alayathuligal.com/blog/p6jw92rjzg2gmynhfb67bbgrnfgegd

 
Previous
Previous

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

Next
Next

கேடிலியப்பர் கோவில்