கும்பகோணம் நாகேஸ்வரர் கோவில்

காய்ச்சல் நீங்க மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியமாக படைக்கப்படும் ஜுரஹர விநாயகர்

கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவாரத்தலம் நாகேஸ்வரர் கோவில். இக்கோவில் குடந்தைக் கீழ்க்கோட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஜுரஹர விநாயகர் எழுந்தருளியிருக்கிறார்.

உஷ்ண சம்பந்தமான நோய்கள் நீங்குவதற்கு, இங்கே வந்து ஜுரஹர விநாயகருக்கு அபிஷேகம் செய்து, மிளகு ரசம் சாதமும், பருப்புத் துவையலும் நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். வெப்ப நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்யும் போது மட்டுமே மிளகு ரசம் சாதம், துவையல் நைவேத்தியம். மற்ற நாள்களில் சாதாரண நைவேத்தியமே படைக்கப்படுகிறது. இந்தப் பிரார்த்தனையை ஞாயிற்றுக்கிழமையில் செய்வது சிறப்பு. அந்நாளில் வர இயலாதவர்கள், வேறு ஏதேனும் ஒரு நாள் வந்து ஜுரஹர விநாயகருக்கு அர்ச்சனை செய்து, காய்ச்சல் நீங்க வேண்டிக்கொண்டு, வணங்கிச் சென்றாலும் நல்லது.

 
Previous
Previous

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில்

Next
Next

குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில்