வனதுர்கா பரமேஸ்வரி கோயில்
தாமரைப்பூவில் தாள் பதித்த வண்ணம் காட்சி தரும் துர்க்கை
மயிலாடுதுறையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள்,அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி.
பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை வடக்கு அல்லது மேற்கு நோக்கி சிம்மவாஹினியாக மகிஷாசுரனை பாதத்தில் வதைத்த வண்ணம் திருக்காட்சி தருவாள்.ஆனால் கதிராமங்கலத்தில் கிழக்கு நோக்கி, அருளையும் பொருளையும் வாரி வழங்கும் மகாலஷ்மி அம்சமாக தாமரைப் பூவில் தாள் பதித்த வண்ணம், வலது மேற்கரத்தில் தீவினையறுக்க பிரத்யேக சக்கரம், இடதுமேற்கரத்தில் சங்கு, வலது கீழ்க்கரத்தில் அபயஹஸ்தம், இடது கீழ்க்கரம் இடுப்பில் வைத்த எழிலான பாவனையுடன் அருளாட்சி புரிகிறாள். இது மிக அபூர்வ அமைப்பாகும்.
மீனாட்சி அம்மன் கோயில்
மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு
மதுரை மீனாட்சி அம்மனும் சென்னை அருகே புழல் பக்கத்தில் உள்ள சிறுவாபுரி உண்ணாமுலை அம்மனும் மரகதக் கல்லால் ஆனவர்கள்.இத்தகைய மரகதக்கல்லால் ஆன அம்மனை வணங்கினால் புதன் கிரகத்தின் அருள் கிடைத்து கல்வியும் ஞானமும் வளரும் என்பது ஐதீகம்.
காஞ்சனமாலை கோயில்
மதுரை மீனாட்சி அம்மனின் தாயார் கோவில்
மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனின் தாயார் பெயர் காஞ்சனமாலை.இவருக்கென்று மதுரை எழுகடல் தெருவில் தனி ஆலயம் இருக்கின்றது.அம்பாளின் அன்னைக்கு என்று தனி ஆலயம் இடம்பெற்றுள்ள ஒரே தலம் மதுரைதான்.
காமாட்சி அம்மன் கோயில்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலின் தனிச்சிறப்பு
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் அம்பாளுக்கென்று தனி சன்னதி கிடையாது.காஞ்சி காமாட்சி அம்மன் கோவில்தான் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சன்னதியாக கருதப்படுகிறது.