சுப்பிரமணிய சுவாமி கோவில்

கல்லால் ஆன கொடிமரம் அமைந்திருக்கும் முருகன் கோவில்

பொதுவாக கோவில்களின் கொடிமரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால், முதலில் கல்லாலான கொடிமரத்தை காண முடியும். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இக்கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு,மிக்க கலைநயத்துடன் விளங்குகின்றது. மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

விளக்கின் அடிப்புறம் உள்ள ஆமை உருவம்

விளக்கின் தண்டு பகுதியில் உள்ள பாம்பு உருவங்கள்

 
Previous
Previous

நாகநாதசுவாமி கோவில்

Next
Next

பிரளயகாலேசுவரர் கோவில்