பார்த்தசாரதி கோவில்

குடும்பத்துடன் கிருஷ்ணர் காட்சி தரும் திவ்ய தேசம்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில்,மனிதர்கள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெருமாள் அருள்கிறார். மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர் அருகில் ருக்மணி தாயார், மார்பில் மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.இந்தப் பெருமாள் ,அர்ஜுனனுக்கு உதவியாக வந்த கிருஷ்ணாவதாரம் என்பதால்,அருகில் ருக்மிணி தாயார் இருக்கிறாள்.வலப்புறத்தில் அண்ணன் பலராமர்,இடதுபுறத்தில் தம்பி சாத்யகி,மகன் பிரத்யும்னன் மற்றும் பேரன் அநிருத்தன் ஆகியோரும் இருக்கின்றனர்.

மகாபாரதப்போரில் பீஷ்மர் எய்த அம்புகளை பார்த்தனுக்குத் தேரோட்டியாக நின்று தாமே தாங்கியதால் ஏற்பட்ட வடுக்களை உற்சவர் திருமுகத்தில் இன்றும் தரிசிக்கலாம்.இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பெருமாள் ஸ்ரீ பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார்.ஆலயமும் அப்பெயரில் அழைக்கப்படுகிறது.

காயங்களுடன் இருப்பதால் இவருக்கான நைவேத்யத்தில்,நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது.மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.

பார்த்தசாரதி கோவில்.gif
Previous
Previous

மாசாணியம்மன் கோயில்

Next
Next

மகாலிங்கேஸ்வரர்_கோயில்