பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்

ஒரே மண்டபத்தில் இரண்டு நந்திகள்

கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் வழியில் கீழக்கொருக்கை அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை. பூக்களை பூமியில் சிருஷ்டித்ததால், உமையவள் புஷ்பவல்லி எனும் திருநாமம் கொண்டாள். அம்பிகை சன்னதி தனியாக தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கருவறையின் முன் இருக்க வேண்டிய நந்தியும் அம்மன் சன்னதி முன் இருக்க வேண்டிய நந்தியும் ஒன்றாக வெளி மண்டபத்தில் அமர்ந்து இருக்கின்றன. இப்படிப்பட்ட அமைப்பை வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாது. முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் கலந்து மாலை கட்டி வெளி மண்டபத்தில் உள்ள இரட்டை நந்திக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தலையெழுத்தை மாற்றும் தலம்

 https://www.alayathuligal.com/blog/h4ew3e86maepf4kp66k67k3sd95eem

 
Previous
Previous

ஆண்டளக்கும் ஐயன் கோவில்

Next
Next

காயாரோகணர் கோவில்