மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில்

கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் ஏந்தியிருக்கும் விநாயகர்

சென்னையில் இருந்து 20 கி மீ.தொலைவில் உள்ள மாங்காடு என்னும் ஊரில் அமைந்துள்ளது வெள்ளீஸ்வரர் கோவில். அசுரர்களின் குருவான சுக்கிரன் இவரை வழிபட்டு பேறு பெற்றதால் இவருக்கு வெள்ளீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்களில் இது சுக்கிரனுக்குரிய பரிகார தலமாகும். இங்கு அம்பிகை சன்னதி கிடையாது. சுவாமி சன்னதி எதிரே, அம்பாள் பாதம் மட்டும் இருக்கிறது.

இக்கோவிலில் உள்ள விநாயகர், கைகளில் நெற்கதிரும், மாங்கனியும் வைத்திருப்பது தனிச்சிறப்பாகும். இடது கீழ் கையில் மோதகத்திற்குப் பதிலாக மாம்பழத்தை வைத்திருப்பதால் இவருக்கு மாங்கனி விநாயகர் என்று திருநாமம் உண்டு. மேலும் இடது மேல் கையில் நெற்கதிர்களை ஏந்தி இருப்பதால், நெற்கதிர் விநாயகர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. இத்தலத்தைச் சுற்றி உள்ள விவசாயிகள், இவருக்கு மாங்கனி மற்றும் நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால் தங்களது விவசாயம் செழிக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

 
Previous
Previous

நெடுங்குணம் தீர்த்தாஜலேஸ்வரர் கோவில்

Next
Next

பவளமலை முத்துகுமார சுவாமி கோவில்