தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில்

அனுமனுக்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ள தேவசமுத்திரம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில். இக்கோவில் விஜயநகரப் பேரரசின் காலத்தில் தோன்றியது. அக்காலத்தில் இப்பகுதி வனமாக இருந்ததால், காட்டுவீர ஆஞ்சநேயர் கோவில் என்று பெயர் பெற்றது. ஆஞ்சநேயர் இங்கு சாய்ந்த கோலத்தில், வலது புறம் திரும்பி நின்றும், தலை மேல் நோக்கியும் , வால் தூக்கி நின்றவாறும், வாலில் சிறிய மணி ஒன்று கட்டியவாறும் காட்சியளிக்கிறாா்.

வளரும் நந்தீசுவரா்

இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்தீசுவரர் ஆவாா். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்தீசுவரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறாா். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

முழுத்தேங்காய் பிராத்தனை

எல்லா ஆஞ்சநேயர் கோவில்களிலும் வடைமாலை, வெற்றிலை மாலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம். ஆனால் இங்கு முழுத்தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். இங்கு வருகை புரிந்து பிராத்தனை செய்யும் பக்தர்களுக்கு தேங்காய், வெற்றிலையுடன் கூடிய சிகப்பு நிற துணி பை வழங்கப்படுகிறது. அவர்கள் பிராத்தனை முடிந்த பிறகு அந்த பையினை கோவிலுனுள் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். எவரொருவர் ஒரு முழுத்தேங்காயை, மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றாரோ, அவருடைய கோரிக்கைகள் மூன்று மாதத்திற்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த நாட்களில் அனுமனை வழிபட்டு தேங்காய் கட்டினால் தங்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

 
Previous
Previous

திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோவில்

Next
Next

திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில்