பொன்வைத்தநாதர் கோவில்

முனிவர்களும் சித்தர்களும் தேனீ உருவில் இறைவனை வழிபடும் தலம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தேவாரத்தலம். சித்தாய்மூர். இறைவன் திருநாமம் பொன்வைத்தநாதர். முன்னொரு காலத்தில் பிரம்மரிஷி தினந்தோறும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு சமயம் அவர் கோவிலுக்கு வர நேரமாகி வட்டது. கோவில் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. அதனால் பிரம்மரிஷி முனிவர் தேனீ உருவெடுத்து சாளரத்தின் வழியே உள்ளே சென்று இறைவனை வழிபட்டு அங்கேயே தங்கத் தொடங்கினார். இவருடன் வந்த மற்ற ரிஷிகளும் இவ்வாறே தரிசனம் செய்தனர். சித்தர்களும் இத்தலத்தில் தேனீ உருவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். சுவாமி சந்நிதியின் தென்பக்கத்தில் உள்ள தேன்கூடு சித்தர்கள் தேனீக்களாக உருமாறி இறைவனை பூஜித்து தேன்கூட்டைக் கட்டினர் என்பது ஐதீகம். இத்தேன் கூட்டிற்கு தினமும் பூஜை நடைபெறுகிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

பக்தைக்காக பல அதிசயங்கள் நிகழ்த்திய சிவபெருமான்

https://www.alayathuligal.com/blog/kxzdkrke5yb7l23a3tmt87x7hsja28

 
Previous
Previous

கண்ணாயிரநாதர் கோவில்

Next
Next

பிரம்மஞானபுரீஸ்வரர் கோவில்