மரக்காணம் வரதராஜப் பெருமாள் கோவில்

திருமண தடை நீக்கும் ஶ்ரீவரதராஜப் பெருமாள் - ஶ்ரீபெருந்தேவித் தாயார்

சென்னை - பாண்டிச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில், 123ஆவது கிலோமீட்டரில் உள்ள ஊர் மரக்காணம். இத்தலத்தில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி தாயார், பூதேவி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். தாயார் திருநாமம் ஶ்ரீபெருந்தேவி.

திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து பெருமாளை பயபக்தியுடன் வேண்டி வணங்கினால் அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்று கூறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளிலும், உத்திர நட்சத்திர நாள்களிலும் ஶ்ரீபெருந்தேவித் தாயாரை மனமுருக அா்ச்சனை செய்து பிராா்த்தித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுபோல் திருமணம் நடந்த பின்னர் கணவன்மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்து இருந்தாலும் அவர்கள் இங்கு வந்து பூஜை செய்து வணங்கினால், பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக தீர்ந்து மீண்டும் சமாதானம் அடைவார்கள்.

மழலைப் பேறு அருளும் நவநீதகிருஷ்ணன்

திருமணமாகி நீண்ட நாள் மழலைப் பேறு வாய்க்காத மங்கையருக்கு இத்தலத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுகின்றது. இக்கோவிலில் சுமார் ஆறு அங்குலம் அளவுள்ள நவநீதகிருஷ்ணன் விக்கிரகம் உள்ளது. மழலைப் பேறு வேண்டும் மங்கையா், கோவில் அா்ச்சகாிடம் இந்த விக்ரகத்தைப் பெற்று தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கோவிலை மூன்று முறை வலம் வந்து சுவாமிக்கு அா்ச்சனை செய்து வழிபட்ட பின்னா் அா்ச்சகாிடம் மீண்டும் இந்த விக்ரகத்தை ஒப்படைக்கின்றனா். இந்த பிராா்த்தனையின் பலனாக பலருக்கு, மழலைப் பேறு ஏற்பட்டிருக்கின்றது.

 
Previous
Previous

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோவில்

Next
Next

ஈரோடு கோட்டை பெரிய மாரியம்மன் கோவில்