அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் யோக நிலையில் அமர்ந்திருக்கும் அரிய காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் நகரத்திலிருந்து 19 கி.மீ. தொலையில் அமைந்துள்ளது அத்திமுகம் ஐராவதேஸ்வரர் கோவில். இக்கோவில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இங்கு இறைவன் ஐராவதேஸ்வரரும், இறைவி காமாட்சி அம்மனும் தம்பதி சமேதராக, சிவ சக்தியாக ஒரே கருவறையில் அருள் பாலித்து வருவது ஒரு தனி சிறப்பாகும்.

பொதுவாக சிவாலயங்களில், நவக்கிரகங்கள் பீடத்தின் மேல் நின்ற நிலையில் காட்சி அளிப்பார்கள். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒன்பது பேரும் அமர்ந்த நிலையில் தோற்றம் அளிக்கிறார்கள்.நவக்கிரகங்கள் அனைவரும் யோக நிலையில் அமைதியாய் இருப்பதனால் தான் இங்கு அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்கள். இப்படி அமர்ந்த கோலத்தில் இருக்கும் நவக்கிரகங்களை ஒரு சில இடங்களில் மட்டுமே நாம் காண முடியும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

சிவலிங்க பாணத்தில் யானையின் உருவம் தெரியும் அபூர்வ காட்சி (17.02.2025)

ஒரே கருவறையில் சிவலிங்கத் திருமேனியும், அம்பிகையும் அருள் பாலிக்கும் அரிய காட்சி

https://www.alayathuligal.com/blog/athimugam17022025

ஐராவதேஸ்வரர் - காமாட்சி அம்மன்

யோக நிலையில் அமர்ந்திருக்கும் நவக்கிரகங்கள்

 
Previous
Previous

திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில்

Next
Next

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில்