அரியலூர் கோதண்டராமசாமி கோவில்

தேர் போன்ற வடிவில் கருவறை அமைந்திருக்கும் கோவில்

அரியலூர் நகரில் அமைந்துள்ளது மிகப்பழமையான கோதண்டராமசாமி கோவில். இந்த நகரத்தின் பெயர், அரி (விஷ்ணு)+இல் (உறைவிடம்)+ஊர் (பகுதி) . அதாவது, விஷ்ணு பகவான் உறைவிடம் கொண்ட பகுதி என்று பொருள். இந்தப் பெயரே, பெயரே காலப்போக்கில் அரியலூர் ஆக மாறியது.

இந்தக் கோவிலில் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், அனுமன் ஒரே பீடத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்கள் எழுந்தருளி இருக்கும் கருவறையானது தேர் போன்ற வடிவில் அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும்.

பெருமாளின் தசாவதார கோலங்கள்

இந்தக் கோவில் தசாவதார மண்டபத்தில் காட்சி அளிக்கும் பெருமாளின் தசாவதாரம் கோலங்கள் நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும். ஒவ்வொரு தசாவதார கோலமும் ஆறரை அடி உயரத்தில், தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தசாவதாரம் மண்டபத்தில், நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர், இரண்யவத நரசிம்மர், பிரகலாத நரசிம்மர் என்று நான்கு வித தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.

பிரார்த்தனை

இந்த கோவிலில் உள்ள கோதண்ட ராமரை தரிசித்தால் நம் வாழ்வில் நிம்மதி ஏற்படும். திருமணம் கை கூடாதவர்கள் வழிபட்டால் விரைவில் வரன் கைகூடி வரும்.

மூலவர்

உற்சவர்

மச்சவதாரம்

கூர்மவதாரம்

வராகவதாரம்

நரசிம்மவதாரம்

வாமன அவதாரம்

பரசுராம அவதாரம்

ராம அவதாரம்

பலராமன் அவதாரம்

கிருஷ்ணவதாரம்

கல்கி அவதாரம்

 
Previous
Previous

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

Next
Next

திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்