கல்பட்டு சனீஸ்வரன் கோவில்

21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தரும் சனி பகவான்

விழுப்புரத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் கல்பட்டு என்ற ஊரில் அமைந்துள்ள தனிக்கோவிலில், மூலவராக சனி பகவான், வேறெங்கும் இல்லாத வண்ணம் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். நான்கு திருக்கரத்துடன், கரங்களில் சூலம், கத்தி, வில் மற்றும் அம்பு தாங்கி, வலது காலை காகத்தின் மீது ஊன்றி நின்ற வண்ணம் காட்சி தருகிறார். மேலும் இவர் யோகநிலையில் இருப்பது இன்னும் சிறப்பான விஷேசமாகும்.

சனி பகவானின் வலது காலில் உள்ள ஊனத்தால் அவரால் வேகமாக நடக்க இயலாது எனவே தான் மந்தன் என்ற திருநாமம் கொண்டார். இதை உணர்த்தும் வகையில் வலது கால் சற்று சிறியதாகவும் இடக்கால் நீண்டு இருக்கும் வண்ணம் மூலவர் விக்கிரகம் அமைந்துள்ளது.

ஏழரை சனி, கண்ட சனி, வக்ர சனி, விரய சனி என்று எந்த சனி தோஷத்தால் பாதிப்பு இருந்தாலும் ஒருமுறை இக்கோவிலில் வந்து பிராத்தனை செய்தால் போதும். அவை யாவும் நிவர்த்தியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 
Previous
Previous

காரைக்குடி நூற்றியெட்டு பிள்ளையார் கோவில்

Next
Next

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்