கொடுமுடி மகுடேசுவரர் கோவில்

கையில் திரிசூலம் ஏந்தி இருக்கும் சனிபகவானின் அபூர்வ தோற்றம்

கரூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் 27 கி.மீ. தூரத்தில், காவிரி நதிக் கரையில் அமைந்துள்ள தேவாரத்தலம் கொடுமுடி. இறைவன் திருநாமம் மகுடேசுவரர். இறைவியின் திருநாமம் வடிவுடை நாயகி. இக்கோவிலில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும்.

திருநள்ளாறு,திருநாரையூர், திருக்கொள்ளிக்காடு, திருவாதவூர், வழுவூர் போன்ற சனிப் பரிகாரத் தலங்களில் இத்தலமும் ஒன்று. இக்கோவிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்து கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். அவர் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் காட்சி தருகிறார். இப்படி திரிசூலம் ஏந்திய சனி பகவானை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இங்கு சனி பரிகாரம் செய்து வழிபட்டால் சனீஸ்வரர் அருள் கிட்டும்.

இத்தலத்து அனுமன், கோரை பற்களோடு எழுந்தருளி இருப்பதும் ஒரு அபூர்வமான காட்சியாகும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு (19.3.2022)

மும்மூர்த்திகள் அருள்பாலிக்கும் தேவாரத்தலம்

பூ பூக்கும், ஆனால் காய் காய்க்காத அதிசய வன்னி மரம்

அவிட்டம் நட்சத்திரத்திற்கான பரிகாரத் தலம்

https://www.alayathuligal.com/blog/7jjhrc8rw2g6jwpgj6a36ddprace2p?rq

அன்னாபிஷேகத்தில் மகுடேசுவரர்

வடிவுடை நாயகி

 
Previous
Previous

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில்

Next
Next

கும்பகோணம் ஏகாம்பரேசுவரர் கோவில்