வேடசந்தூர் நரசிம்ம பெருமாள் கோவில்

சிங்கமுகமின்றி, சாந்த முகத்துடன் தோற்றமளிக்கும் நரசிம்ம பெருமாள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அமைந்துள்ளது நரசிம்ம பெருமாள் கோவில்.இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது.

இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி பெருமாள் சாந்த முகத்துடன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.

பிரார்த்தனை

விபத்து மற்றும் எம பயம் நீங்க, ஆயுள் அதிகரிக்க, திருமணத் தடைகள் நீங்க இங்கு நரசிம்ம பெருமாளிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

படங்கள் உதவி : திரு. அம்பி சுப்பிரமணியம், ஆலய அர்ச்சகர்

 
Previous
Previous

திருச்சுழி திருமேனிநாதர் கோவில்

Next
Next

முத்துமலை முருகன் கோவில்