திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில்

பெருமாளின் எதிரே கருடாழ்வார் இல்லாத திவ்ய தேசம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள திவ்ய தேசம் பத்மநாபசாமி கோவில். இக்கோவிலில் மூலவர் பத்மநாபசாமி, அனந்தசயனம் எனப்படும் யோக நித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது.

எல்லா பெருமாள் கோவிலிலும், மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில், பெருமாளின் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். ஏனென்றால், பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை, திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் பெருமாள் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.

 
Previous
Previous

சமயபுரம் மாரியம்மன் கோவில்

Next
Next

அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்