சாரங்கபாணி கோவில்

மாமனார் வீட்டோடு மாப்பிள்ளை
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தாயாரின் திருநாமம் கோமளவல்லி ஆகும். இந்த தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். திருமால், அவளைத் திருமணம் செய்து, வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே, இங்கு தாயாருக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. அதற்கேற்றாற்போல், தாயார் சன்னதிக்கு சென்ற பிறகே, பெருமாள் சன்னதிக்குள் செல்லும் வகையில் கோவில் வடிவமைப்பும் செய்யப்பட்டிருக்கிறது. இக்கோவிலில் காலை நடைதிறக்கும் போது, சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை, கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடத்துகின்றனர். தாயாரே பிரதானம் என்பதால், கோமாதா பூஜை, தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே, சுவாமி சன்னதியில் நடக்கிறது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

பக்தனுக்கு சிரார்த்தம் செய்யும் பெருமாள்

https://www.alayathuligal.com/blog/lzt9p8s395d442adxxnmrlfptwsdh2

பெருமாள் வில்லுடன் இருக்கும் திவ்ய தேசம்

https://www.alayathuligal.com/blog/2z8setjrf8yg3ynwrpltz3rlgl83yk

 

 
Previous
Previous

சுப்பிரமணிய சுவாமி கோவில்

Next
Next

பழமலைநாதர் கோயில்