புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்

கிணற்றின் மேல் எழுந்தருளி உள்ள விநாயகர்

விநாயகரை கடலில் தூக்கி போட்டாலும், மீண்டும் தானாக வந்து கோவிலில் அமர்ந்த அதிசயம்

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில். தொண்டை மண்டலத்தில் வேதபுரி அகஸ்தீசபுரம், வேதபுரம் எனும் பெயர்களோடு இருந்தது இந்த புதுச்சேரி. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்கு வருவதற்கு முன்பிருந்து, அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் தான் மருவி, மணக்குள விநாயகர் ஆனது.

தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் அமைந்திருக்கின்றது. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் இப்போதும் நீர் சுரந்து கொண்டிருக்கிறது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. இதில் வற்றாத நீர் எப்போதும் உள்ளது. இது முன்காலத்தில் ஒரு குளமாவும் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஒயிட் டவுன் எனப்படும் இந்தப் பகுதியின் அருகில் ஒரு குளம் உண்டு; மணற் குளம் சென்று அதற்கு பெயர். இதன் அருகில் கோவில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்' எனப் பெயர் பெற்றார். 1688-ஆம் வருடம் பிரெஞ்சுக்காரர்கள் இங்கு ஒரு கோட்டை கட்ட திட்டமிட்டனர். அந்தக் கோட்டையின் பின்புறம் மணக்குள விநாயகர் ஆலயம் இருந்தது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த இந்துக்கள் இந்த விநாயகருக்குத் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் அவ்வப்போது உற்சவங்களையும் நடத்தி வந்தனர். பிரெஞ்சு ஆட்சியாளர்களால் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து, ஈஸ்டர் காலம் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி உற்சவம் போன்ற வைபவங்களை நடத்தக்கூடாது என்று அப்போதைய பிரெஞ்சு கவர்னர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதனால் கோபம் அடைந்த அந்தப் பகுதியில் வாழ்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் எவரும் வேலைக்குச் செல்லாமல் இருந்ததுடன், ஊரைவிட்டே வெளியேறவும் முற்பட்டனர். அப்படி நிகழ்ந்தால், வேலை செய்ய ஆட்கள் இல்லாது திண்டாட நேரிடுமே என்ற அச்சத்தில், அவர்களின் போராட்டத்துக்குப் பணிந்தார் கவர்னர். தடை உத்தரவு வாபஸ் ஆனது.

ஆனாலும், மணக்குள விநாயகர் ஆலயத்தை அங்கிருந்து அகற்ற, பிரெஞ்சுக்காரர்கள் திட்டமிட்டனர். கோவிலுக்கு அருகில், பிரெஞ்சுக்காரர் 'மொம்பரே என்பவரின் பூங்கா இருந்தது. அவருக்கும், விநாயகர் கோவிலுக்கு அதிகமான பக்தர்கள் வந்து செல்வது பிடிக்கவில்லை. இதையடுத்து, எவரும் அறியாத வண்ணம் இரவோடு இரவாக விநாயகர் சிலையை எடுத்துக் கடலில் போடுமாறு தனது ஆட்களை ஏவினார் மொம்பரே. அவ்வாறே விநாயகர் சிலை கடலில் போடப்பட்டது. ஆனால், மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோவிலில் எந்த இடத்தில் அந்தச் சிலை வைக்கப்பட்டு இருந்ததோ, அதே இடத்தில் மறுபடியும் இருந்தது. மொம்பரே அதிர்ச்சி அடைந்தார். தான் அனுப்பிய ஆட்கள் மீதே அவருக்குச் சந்தேகம் எழுந்தது. மறுபடியும், விநாயகர் சிலையை கடலில் கொண்டு போய் போடும்படி உத்தரவிட்டவர், அந்தமுறை தானும் உடன் சென்றார். மொம்பரேயின் ஆட்கள் சிலையைப் பெயர்த்தெடுத்துக் கடலில் போட முயன்றபோது, திடீரென கண்பார்வை இழந்தார் மொம்பரே. மணக்குள விநாயகரின் மகிமையை உணர்ந்தார். தனது செயலுக்காக வருந்தியதுடன், தன்னுடைய தவறுக்குப் பரிகாரமாக கோவிலை அபிவிருத்தியும் செய்தார். வெள்ளைக்காரருக்கு மனமாற்றம் தந்ததால் இவரை, 'வெள்ளைக்காரப் பிள்ளையார்' என்றும் அழைக்கிறார்கள்.

புதுவையில் 1908 முதல் 1918 வரை பத்து ஆண்டுகள் தங்கி இருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் , இந்த விநாயகரை போற்றி; 'நான்மணிமாலை' என்ற தலைப்பில் 40 பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற பாரதியின் கனவுப்படி இந்தக் கோவில் கருவறை விமானம் பொன்னால் வேயப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இந்த கோவில் மட்டுமே.

பிரார்த்தனை

இக்கோவிலில், இந்து மதம் என்றில்லாமல் முஸ்லிம், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டினரும் பெருமளவில் வந்து வழிபடுகிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் இவற்றிற்காக இங்கு வழிபடுகிறார்கள். 'பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன் மனமே! எனை நீ வாழ்த்திடுவாய்!’ என்ற

திருவிழா

விநாயகர் சதுர்த்தி இத்தலத்தில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். அது தவிர ஜனவரி முதல் தேதி அன்றுதான் இத்தலத்தின் பிரமாண்டமான அளவில் பக்தர்கள் கூடுவர்கள். இது தவிர மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தின் போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வர்

Read More
திருக்காமீசுவரர் கோவில்

திருக்காமீசுவரர் கோவில்

சுகப்பிரசவம் அருளும் பிரசவ நந்தி

புதுவை மாநிலத்தின் பெரிய கோவில் என பெருமை கொண்டது வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில். இக்கோவிலின் மற்றொரு சிறப்பு, இங்குள்ள சுகப்பிரசவ நந்தி ஆகும். அம்மன் சன்னிதியை(வடக்கு திசை) நோக்கியவாறு இந்தப் பிரசவ நந்தி அமைந்துள்ளது. சுகப்பிரசவம் விரும்பும் எவரும், இங்கு வந்து, மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு, இந்தப் பிரசவ நந்தியை அம்மன் பார்க்கும் தென்திசை நோக்கி(அதாவது நந்தியின் இயல்பு திசைக்கு எதிர் திசையில்)திருப்பி வைத்துவிட வேண்டும். பிரசவ நந்தியின் அருளால் நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். அதன்பிறகு, குழந்தையும், தாயும் இவ்வாலயம் வந்து பிரசவ நந்திக்கு சிறிய அளவில் அபிஷேகம் செய்து, அந்த நந்தியை, அம்மனை நோக்கிய வடக்கு திசையில், அதாவது அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி வைத்துவிட வேண்டும். இதுவே சுகப்பிரசவத்திற்கான பரிகாரமும், நன்றிக்கடனும், ஆகும்.

Read More
விநாயகர், vinayakar Alaya Thuligal விநாயகர், vinayakar Alaya Thuligal

மணக்குள விநாயகர் கோயில்

விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ள கோவில்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வேறு எந்த விநாயகர் கோவிலிலும் இல்லாத வகையில்,விநாயகருக்கு என்று தனி பள்ளியறை உள்ளது. தினமும் நைவேத்தியம் முடித்தவுடன் விநாயகர் இந்த பள்ளியறைக்குச் செல்வார்.

Read More