திங்களூர் கைலாசநாதர் கோவில்

திங்களூர் கைலாசநாதர் கோவில்

சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

திருவையாற்றில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவார வைப்புத் தலம் திங்களூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. நவக்கிரகங்களில் சந்திரன், இத்தலத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற தலம். 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகளின் அவதாரத் தலம்.

சிவாலயங்களில், எழுந்தருளி உள்ள பரிவார தேவதைகளில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் இருவர். ஒருவர் சனீஸ்வர பகவான். மற்றொருவர் சண்டிகேசுவரர். இதில் சண்டிகேசுவரர் இறைவன் கருவறையின் வெளிச்சுற்றில், அபிஷேக நீர் வெளியேறும் கோமுகத்தின் அருகில் தியானத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் இத்தலத்தில் சண்டிகேஸ்வரர் தனது மனைவியுடன் எழுந்தருளி இருப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.

சந்திர தோஷ நிவர்த்தி தலம்

ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திர தோஷம் ஏற்பட்டிருக்கும் பொழுது, அவருக்கு மனநிலைக் கோளாறுகள், தாயுடன் கருத்து வேறுபாடு, நீரில் கண்டம், வெளிநாட்டு பயணத் தடை போன்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே, சந்திர திசை மற்றும் சந்திர புத்தி நடைபெறும்போது ஏற்படும் தீங்குகளில் இருந்து நிவர்த்திக்காக சென்று வழிபட வேண்டிய சந்திர பரிகார தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, திங்களூர் கைலாசநாதர் கோவில்.

Read More
பழூர் விசுவநாத சுவாமி கோவில்

பழூர் விசுவநாத சுவாமி கோவில்

நவக்கிரகங்கள் தங்கள் மனைவியருடனும், வாகனத்துடனும், ஆயுதத்துடனும், யந்திர சக்தியுடனும் இருக்கும் அபூர்வக் காட்சி

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழூர் விசுவநாத சுவாமி கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி. 2000 ஆண்டுகள் பழமையான கோவில் இது. மற்ற கோவில்களில் வட்ட வடிவில் ஆவுடையார் அமைந்திருக்கும் நிலையில், இக்கோவிலில் இறைவன் விசுவநாதர், சுயம்பு மூர்த்தியாக சதுர வடிவ ஆவுடையாரில் எழுந்தருளி இருப்பது தனிச்சிறப்பாகும். அம்பிகை விசாலாட்சி இத்தலத்தில் கல்யாண கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவன், இறைவியை வணங்கிச் சென்றால், காசிக்குச் சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் நவக்கிரகங்கள் பெரும் சிறப்பை பெற்றவை. பொதுவாக சிவாலயங்களில் நவக்கிரகங்கள் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளி இருப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவக்கிரகங்கள், 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் அமைந்த பீடத்தின் மேல் தங்கள் மனைவியருடன் எழுந்தருளி இருக்கிறார்கள். இங்கு நவக்கிரக நாயகர்களில் சூரியன் உஷா-ப்ரத்யுஷாவுடனும், சந்திரன் ரோகிணியுடனும், செவ்வாய் சக்திதேவியுடனும், புதன் ஞானதேவியுடனும், குரு தாராதேவியுடனும், சுக்கிரன் சுகீர்த்தியுடனும், சனி நீலாதேவியுடனும், ராகு சிம்ஹியுடனும், கேது சித்திரலேகாவுடனும், காட்சியளிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நவக்கிரகங்கள் தங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், யந்திர சக்திகளுடனும் எழுந்தருளியிருப்பதும் இங்கு மட்டும்தான். இத்தகைய நவக்கிரக அமைப்பை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

நவக்கிரக பரிகாரத் தலம்

இக்கோவில் ஒரு சிறந்த நவக்கிரக பரிகாரத் தலமாகும். அதனால் தான் இக்கோவில், நவக்கிரக கோவில் என்ற பெயரில் இப்பகுதியில் பிரசித்தம் பெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். ஜாதக ரீதியில் நவக்கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்கள், சனிக்கிழமைகளில் இக்கோவிலுக்கு வந்து நவக்கிரக நாயகர்களை வணங்கி வழிபட வேண்டும். எள் விளக்கேற்றி வழிபாடு செய்வதுடன், நவக்கிரக நாயகர்களின் சன்னதியை 9 முறை வலம் வந்து, தேங்காய்- பழம் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

மேலும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணத் தடைப் பாதிப்புள்ளவர்கள், குடும்பப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோவில் நவக்கிரக நாயகர்கள் சன்னதிக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தோஷங்கள் நிவர்த்தியாகி உரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

Read More
திங்களூர் கைலாசநாதர் கோவில்

திங்களூர் கைலாசநாதர் கோவில்

பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம்

திருவையாற்றில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள தேவார வைப்புத் தலம் திங்களூர் கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. நவக்கிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாகப் போற்றப்படுகிறது. 63 நாயன்மார்களில் ஒருவரான அப்பூதி அடிகளின் அவதாரத் தலம்.

சந்திரனின் சாபத்தைப் போக்கிய தலம்

நவக்கிரக தலங்களில் திங்களூர் இரண்டாவது தலமாகும். தட்சன் தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தான். ஒவ்வொரு நட்சத்திரமாக திகழும் 27 மனைவிகளிடமும், ஒரே மாதிரி அன்பு செலுத்த வேண்டிய சந்திரன், அவர்களில் ரோகிணியிடம் மட்டும் தனி பிரியம் செலுத்தினான். மற்ற 26 நட்சத்திர மனைவிகளும் தங்கள் தந்தை தட்சனிடம் முறையிட்டனர். மாமனார் தட்சன், 27 மனைவிகளிடமும் சமமாக அன்பு செலுத்தும்படி கூற, சந்திரன் அதை ஏற்க மறுத்தான். கோபம் கண்ட தட்சன், சந்திரனின் அழகு குறையவும், அவனது கலைகள் மங்கும்படியும் சாபம் இட்டான். தட்சன் இட்ட சாபம் நீங்க சந்திரன் இந்த தலத்தில் நீண்ட காலம் தவம் செய்தான். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி இறைவனை பூஜித்தான். ஒரு பங்குனி மாதப் பௌர்ணமியில், இறைவன் காட்சி கொடுத்து சந்திரனின் சாபத்தைப் போக்கினார். அதனால், இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தில் சந்திர பகவானின் ஒளி மூலவர் கைலாசநாதர் திருமேனியில் விழுவதை இன்றும் காணலாம்.

பங்குனி உத்திரத்தன்று சூரிய பூஜையும், பௌர்ணமி பிரதமையில் சந்திர பூஜையும் நடைபெறும் தலம்

ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரத்தன்று காலை உதயத்தில் 6 மணிக்கு சூரியபகவான் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வணங்கி ஆராதனை செய்யும் சூரிய பூஜையும், மறுநாள் பௌர்ணமி பிரதமையில் மாலை 6 மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின் மீது படுவதால் அன்று சந்திர பூஜையும் நடைபெறும். இப்படி அடுத்தடுத்த நாட்களில் சூரிய பூஜையும், சந்திர பூஜையும் நடைபெறுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை

இத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இறைவன் மற்றும் தனி சந்நிதியில் காட்சி தரும் சந்திரனை அபிஷேகம், அர்ச்சனை, நெய் விளக்கு ஏற்றி வழிபட, சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் ஏற்படும். அஸ்வினி, சுவாதி, மிருகசீரிடம், உத்திரம், திருவோணம், சதயம் மற்றும் ரேவதி போன்ற நட்சத்திர தினங்களிலும், சந்திரஹோரை வேளைகளிலும் இந்த கோவிலில் குழந்தைகளுக்கு சந்திரனையும், பசுவையும் காண்பித்து ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் பால், தேன் கலந்து குழந்தைக்கு சோறூட்டும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

Read More
நெடுங்களநாதர் கோயில்

நெடுங்களநாதர் கோயில்

சூரியனை நோக்கி திரும்பியிருக்கும் எட்டு கிரகங்கள்

சிவாலயங்களில் பொதுவாக நவகிரகங்கள் இருக்கும் பீடத்தில் சூரியன் நடுவில் இருப்பார். அவரை சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் வெவ்வேறு திசைகளை நோக்கிய வண்ணம் இருப்பார்கள். ஆனால் திருச்சியை அடுத்த தேவாரப்பாடல் பெற்ற திருநெடுங்களம் நித்தியசுந்தரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் தன் இரு தேவியருடன் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மற்ற எட்டு கிரகங்கள், சூரியனை நோக்கி திரும்பியிருக்கிறார்கள். இப்படி சூரியனை நோக்கி உள்முகமாக திரும்பி இருப்பது ஒரு அரிதான அமைப்பாகும்.

Read More