தேவகோட்டை கோட்டை அம்மன் கோவில்

கருவறையில் விக்கிரகம் இல்லாமல் பீடம் மட்டுமே இருக்கும் அம்மன் தலம்

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை என்ற ஊரில் கோட்டை அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோட்டை அம்மன் தேவகோட்டையின் காவல் தெய்வம் ஆகும். கோட்டை என்றால் அரண்மனை என்று பொருள். கோட்டையில் வாழ்பவர்கள் கூட, தம் வாழ்வில் உயர்வதற்கு கோட்டை அம்மனை வழிபட வேண்டும்.

இக்கோவில் கருவறையில் அம்மனின் விக்கிரகம் கிடையாது. பீடம் மட்டும் தான் இருக்கும் அதற்கு தான் தினசரி பூஜை நடைபெறுகிறது. விழா காலங்களில் பீடத்தின் மேல் ஒரு கும்பமும் தேங்காயும் வைத்து, அதை அம்மன் போல் அலங்கரித்து பூஜை செய்வார்கள். இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது, அச்சமயத்தில் உருவாக்கப்படும் அம்மன் சிலை, தன் கண்களை ஒரு வாரத்தில் திறக்கும் என்பது ஐதீகம். கோட்டை அம்மனை இச்சமயத்தில் வழிபடுவது அதிஷ்டம். இத்தருணத்தில் நாம் செய்யும் வேண்டுதலின் வலிமை அதிகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனை

இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.நம் வேண்டுதலுடன் தொடர்புடைய பொருட்களை, வெள்ளியில் செய்த வடிவமாக, கோவிலில் வைத்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். குறிப்பாக பணியில் உயர் பதவி கிடைக்க, கோட்டை அம்மன் உதவுவாள். உதாரணத்திற்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள், குழந்தை வடிவத்தை வைப்பர். வீடு வாங்க விரும்புவோர், வீட்டின் வடிவத்தை வைப்பர். உடல் நல குறைவு ஏற்பட்டால் குணமடைய வேண்டிய உடல் உறுப்பு பகுதிகளின் உருவத்தை வைக்கலாம். இவ்வுருவங்கள் இக்கோவிலின் வாசலிலேயே கிடைக்கும்.

ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, கோட்டை அம்மனுக்கு மிகவும் விசேஷமாகும். எனவே இந்த நாளில் கோட்டை அம்மனை நாம் வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம்.

மீனாட்சி அலங்காரம்

காய்கறி அலங்காரம்

ரூபாய் நோட்டு அலங்காரம்

 
Previous
Previous

சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில்

Next
Next

வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்