தலத்தின் தனிச்சிறப்பு

பஞ்சரங்க தலங்கள்

108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் தரும் தலங்கள்

பஞ்சரங்க தலங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (பெருமாள்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும். பஞ்ச ரங்க தலங்களில், பெருமாள் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.

கீழ்க்கண்ட ஐந்து தலங்கள் பஞ்சரங்க தலங்கள் ஆகும்.

1. ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),

2. அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),

3. மத்திய ரங்கம் – ஸ்ரீரங்கம் (திருச்சி),

4. சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),

5. பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).

பஞ்ச ரங்கத் தலங்களை தரிசித்தால் 108 திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் உண்டு. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்னை உள்ளவர்கள் பஞ்ச ரங்கத் தலங்களை வழிபட்டால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை.

ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதஸ்வாமி

கோவிலடி அப்பக் குடத்தான்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்

கும்பகோணம் சாரங்கபாணி

திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர்

Previous
Previous

மேலூர் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்

Next
Next

வீரட்டேசுவரர் கோவில்