வேணுகோபாலசுவாமி கோவில்

பத்மாசன கோலத்தில் வணங்கி நிற்கும் அபூர்வ கருடாழ்வார்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெங்கடாம்பேட்டை. இத்தலத்திலுள்ள, வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாமா ருக்மணி சமேத ஶ்ரீவேணுகோபாலனாக அருள்பாலிக்கிறார்.

இக்கோவில் கோபுர வாயிலைக் கடந்ததும், பலிபீடம் அருகே அபூர்வ கோல கருடாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. பெரும்பாலான ஆலயங்களில் நின்று கை கட்டி வணங்கி நிற்கும் கோலத்திற்கு பதிலாக இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன கோலத்தில் அமர்ந்துள்ளார். கைகள் இரண்டும் வணங்கி நிற்க, இடக்கையில் நாகம் சுற்றி தொடைமீது படமெடுத்து உள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களோடு இவர் காட்சி தருகின்றார். இது ஒரு அபூர்வ கோலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

குழலூதும் அழகிய ஶ்ரீவேணுகோபாலன்

https://www.alayathuligal.com/blog/e34gxzgbya2nzmgj7lssfl84dykkse

ஶ்ரீவேணுகோபாலன்

பத்மாசன கோலத்தில் கருடாழ்வார்

 
Previous
Previous

எறும்பீசுவரர் கோவில்

Next
Next

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்