தாருகாபுரம் மத்தியஸ்வரர் கோவில்

நவக்கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி

தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ள தாருகாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது மத்தியஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் மத்தியஸ்வரர். இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

இக்கோவிலிலுள்ள தட்சிணாமூர்த்தி, தனது காலடியில் ஒன்பது நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. நவக்கிரக பீடத்தில் அமர்ந்து இருக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.

சத்ரு சம்ஹார பைரவர்

இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை 'சத்ரு சம்ஹார பைரவர்' என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும்.

 
Previous
Previous

உத்திரமேரூர் சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்

Next
Next

பொன்மலை விஜயராகவப் பெருமாள் கோவில்