கோலவில்லி ராமர் கோவில்

சங்கு சக்கரம் ஏந்திய கருடாழ்வார்

கும்பகோணம்-அணைக்கரை சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திவ்யதேசம் வெள்ளியங்குடி. கோலவில்லி ராமர் கோவில். நவகிரகங்களில் சுக்கிரனாகிய வெள்ளி இத்தலப் பெருமானை தவமிருந்து வழிபட்டமையால், இந்த ஊர் வெள்ளியங்குடி என்ற பெயர் பெற்றது. இத்தலத்தில் உள்ள பெருமாள் கிழக்கு நோக்கி, பள்ளி கொண்ட கோலத்தில் வர்ணம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தை நிர்மாணித்த அசுர குல சிற்பி மயன், திருமால் தனக்கு இத்தலத்தில் ராமராக காட்சி தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். திருமாலும் அவன் விருப்பத்திற்காக, தன் கரத்திலிருந்த சங்கு சக்கரத்தை, கருடாழ்வாரிடம் கொடுத்து விட்டு கோலவில்லி ராமனாக, வில் அம்புகளுடன் தரிசனம் தந்தார். அதனால்தான், இந்த ஆலயத்தில் கருடாழ்வார் தன் நான்கு கரங்களுள், இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தருகிறார். இத்தகைய கருடாழ்வாரின் காட்சி வேறு எந்த திவ்ய தேசத்திலும் இல்லை. சுக்கிரன் திருமாலை வழிபட்டு கண் பார்வை பெற்ற தலம், எனவே வெள்ளியங்குடி கோலவில்லி ராமரை வழிபட்டால் கண் நோய், சுக்கிர தோஷம் நீங்கி சுகமான வாழ்வு உண்டாகும்.

இங்கு, கருங்கல் தரையில் செங்கதலி வாழை முளைத்துள்ளது, மற்றொரு ஆச்சரியமாகும். ஆண்டுக்கு ஒரு முறை குலை தள்ளுவதும் பல வருடங்களாக நிகழ்ந்து வருகிறது.

Oct 02 Garudaalwar Pic No 2.jpg
Oct 02 Kolavilraman Pic No 1.jpg
Previous
Previous

ஆதிகேசவ பெருமாள் கோவில்

Next
Next

பாலசுப்பிரமணியர் கோவில்