காஞ்சிபுரம் கனக துர்கா கோவில்

பழ அபிஷேகம் செய்தால் நற்பலன்கள் தரும் கனக துர்கா

காஞ்சிபுரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ஏனத்தூர் சாலையில் கோனேரி குப்பம் என்ற இடத்தில் கனக துர்கா கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் கருவறையில், கனக துர்கா அமர்ந்த கோலத்தில் தனது இடது காலை மகிஷாசுரனின் தலை மீதும் வலது காலைத் தரையில் ஊன்றியும் காட்சித் தருகின்றாள். கனக துர்கையின் வலதுபுறம் சிங்கமும் இடது புறம் பூத கணமும் இருக்கிறார்கள். தன் கைகளில் சங்கு, சக்கரம்,திரிசூலம்,வில், பாசம், அம்பு,வாள், கேடயம் ஏந்தி இருக்கின்றாள்.

கனக துர்கா அம்மனை வழிபடும்போது, பழங்களால் அபிஷேகம் செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வாழைப்பழ அபிஷேகம் செய்தால் சாகுபடி செய்த பயிர்கள் நல்ல மகசூல் தரும். பலாப்பழ அபிஷேகம் செய்தால்... நினைத்தது நடக்கும். மாம்பழ அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். மாதுளம்பழ அபிஷேகம் செய்தால் கோபம் தீரும். எலுமிச்சம்பழம் அபிஷேகம் செய்தால் பகைவர் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கை. நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ கனக துர்கா அம்மன் அருள் புரிவாள் என்பது ஐதீகம்..

 
Previous
Previous

மங்கள சனீஸ்வரர் கோவில் (என்ற) சங்கர நாராயணர் கோவில்

Next
Next

கைலாசநாதர் கோவில்