வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்

தென்திசை நோக்கி காட்சி தரும் ஞான துர்க்கை

நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவன் திருநாமம் திருமறைக்காடர். இறைவியின் திருநாமம் வேதநாயகி, யாழைப் பழித்த மொழியாள். 64 சக்தி பீடங்களில் ஒன்றான சுந்தரி பீடம் அமையப் பெற்ற கோவிலாகவும் இது திகழ்கிறது.

பொதுவாக சிவாலயங்களில், மூலவர் கருவறையின் சுற்றுச்சுவரில் வடக்கு நோக்கி பரிவார தேவதையான துர்க்கை எழுந்து அருளி இருப்பாள். ஆனால் இத்தலத்தில் பரிவார தேவதையான துர்க்கையானவள் தென்திசை (மூலவர் சந்நிதியை) நோக்கி காட்சி தருகிறாள். இது ஒரு அரிதான காட்சியாகும். தட்சிணாமூர்த்தி போல் தென்திசை நோக்கி எழுந்தருளி இருப்பதால் இவளை ஞான துர்க்கை என்பார்கள். திரிபங்கி வடிவில் நின்ற கோலத்தில் புன்முறுவல் காட்டி எழுந்தருளி உள்ளாள். இவள் வேதாரண்யத்தின் காவல் நாயகி என்பர் ஆன்றோர்.

பிரார்த்தனை

இவள் மிகுந்த வரப்பிரசாதி என்பதால் இத்தலத்தின் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகின்றாள். துர்க்கை அம்மன் சந்நிதியில் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜைகள் மிகவும் விசேஷம். இவளை வழிபட்டால் குழந்தை இல்லாமை, திருமணத் தடை, பில்லி- சூனியம், கிரக கோளாறுகள் போன்ற குறைபாடுகள் விலகும்.

இக்கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. சரஸ்வதி  தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி (24.05.2022)

https://www.alayathuligal.com/blog/ncknszclnaa9833jmyymw2en3ezj9s

 

2. இராமபிரானின் தோஷத்தை நீக்கிய விநாயகர் (20.05.2022)

https://www.alayathuligal.com/blog/x2sjxkk6agzlmhm9saa4afd9ybzklb

 
Previous
Previous

நடுசத்திரம் காசிவிசுவநாதர் கோவில்

Next
Next

திருக்கண்டியூர் பிரம்மசிரகண்டீசுவரர் கோவில்