மீனாட்சி அம்மன் கோவில்

புலிக்கால் விநாயகர்

விநாயகரை யானை முகமும், மனித உடலும் கொண்ட தோற்றத்தில் தான் நாம் தரிசனம் செய்கிறோம். மதுரை மீனாட்சி அம்மன் சன்னதிக்கு வெளியே உள்ள துவாரபாலகர்கள் உள்ள மண்டபத்தில் பெண் உருவ பிள்ளையார் இருக்கிறார். இவர் ஒரு கையில் தாமரை மலர் ஏந்தி இருக்கிறார். யானை முகமும், கால் முதல் இடை வரை புலியின் உருவமும், இடை முதல் கழுத்து வரை பெண் உருவமும் கொண்டிருக்கிறார். இவருக்கு புலிக்கால் பாதங்கள் இருப்பதால், இவரைப் ‘புலிக்கால் விநாயகர்’ என்று அழைக்கின்றனர். வடமொழி நூல்களில் ‘வியாக்ரசக்தி கணபதி’ (வியாக்ரம் என்றால் புலி) என்று இவரைக் குறிப்பிடுகின்றனர். புலிக்கு இணையான சக்தி அளிப்பவர் என்று இதற்கு விளக்கம் கூறுகின்றனர்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

மதுரை மீனாட்சி அம்மன

https://www.alayathuligal.com/blog/l6eks5ceh4mjgbcx42w4tamp656mnn

முக்குறுனி விநாயகர்

https://www.alayathuligal.com/blog/8mhwgbl7fakbj8n3cax4hhfshw6ljm

ஆங்கிலேய கலெக்டரின் உயிரை காப்பாற்றிய மீனாட்சி அம்மன்

https://www.alayathuligal.com/blog/fy24fye7aa8mam373ddd3wlhmwada8

மரகதக் கல்லால் ஆன அம்மன்களின் விசேடச் சிறப்பு

https://www.alayathuligal.com/blog/nxt2wmgsrsf5na753gydpl9blkz79k

 
Previous
Previous

பஞ்சமுகேஸ்வரர் கோவில்

Next
Next

வரதராஜ பெருமாள் கோவில்