இஞ்சிமேடு வரதராஜபெருமாள் கோவில்

ராமரின் வில்லின் மேல்புறத்தில் நரசிம்மர் எழுந்தருளி இருக்கும் அபூர்வ கோலம்

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 64 கி.மீ. தொலைவில் உள்ள இஞ்சிமேட்டில் அமைந்துள்ளது ஸ்ரீ பெருந்தேவிதாயார் சமேத வரதராஜபெருமாள் கோவில்.

இந்த கோவிலில் ஸ்ரீ வரதராஜபெருமாள் சன்னதி, ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதி, கல்யாண லட்சுமி நரசிம்மர் சன்னதி, ராமருடன் லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் இருக்கும் சன்னதிகள் உள்ளன. இத்தலத்து ராமபிரான், பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ராமபிரானின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் வில்லின் மேல்புறத்தில் நரசிம்ம மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். இது, வேறு எங்கும் காண முடியாத அற்புதமாகும்.

ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் இருக்கும் அபூர்வக் காட்சி

ராமரின் அருகிலேயே கருடாழ்வாரும், அனுமனும் காட்சியளிக்கின்றனர். இப்படி கருவறையில் பெரிய திருவடியும், சிறிய திருவடியும் ஒருசேர காட்சியளிப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அபூர்வக் காட்சியாகும்.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க இக்கோவிலுக்கு வந்து ஸ்ரீபெருந்தேவி தாயாருக்கு மஞ்சள் மாலை சாற்றுவதாக வேண்டிக் கொள்கின்றனர். பின்னர் தங்கள் இல்லத்திற்குச் சென்று இத்தலத்தின் தாயாரை வேண்டி ஒரு நாளுக்கு ஒரு மஞ்சளை எடுத்து பூஜையறையில் வைக்கின்றனர். இவ்வாறு செய்து வர 48 நாட்களுக்குள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் இந்த மஞ்சளை மாலையாகத் தொடுத்து காணிக்கையாக தாயாருக்கு சமா்ப்பிக்கின்றனா்.

படங்கள் உதவி : திரு. பாலாஜி பட்டர், கோவில் அர்ச்சகர், இஞ்சிமேடு

ராமருடன் லட்சுமணர், சீதாதேவி, ஆஞ்சநேயர், கருடாழ்வார்

ராமனின் வில்லின் மேல்புறத்தில் நரசிம்மர்

 
Previous
Previous

காவேரி அம்மன் கோவில்

Next
Next

தர்மபுரி கல்யாண காமாட்சி கோவில்