ஆடுதுறை ஆபத்சகாயேசுவரர் கோவில்

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சுவர்ண பைரவர்

கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் ஆடுதுறை. இறைவன் திருநாமம் ஆபத்சகாயேசுவரர். இறைவியின் திருநாமம் பவளக்கொடியம்மை. இத்தலம் காவிரிதென்கரையில் இருப்பதாலும், சுக்கிரீவன் வழிபட்ட தலமாதலாலும் தென்குரங்காடுதுறை என்றும் வழங்கப்படுகிறது.

அனுஷம் நட்சத்திரத்தின் சிறப்புகள்

முற்பிறவிகளில் அளவற்ற தான தர்மங்களைச் செய்தவர்கள், இப்பிறவியில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறப்பார்கள். முற்பிறவியில் சிறிது பூர்வ புண்ணியம் சேர்த்தவர்களும் இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவது அனுஷத்தில் பிறந்தவர்களே. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், முற்பிறவியில் சிறிது பூர்வ புண்ணியம் சேர்த்திருந்தாலும் கூட, இப்பிறவியில் தகுந்த ஆன்மீக குருவை அடைவார்கள்.

சுவர்ண பைரவர் வழிபாடு

அகத்தியர் இந்த தலத்தில் சுவர்ண பைரவர் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதனாலேயே பல வரங்களைப் பெற்றார். அவருக்கு ஈசன் நடனகோலம் காட்டியருளினார். சுவர்ணபைரவர் இங்கே சக்தி வாய்ந்தவராக அருள்பாலித்துவருகிறார். சுவர்ண பைரவரைச் சிறப்போடு பூஜை செய்து அன்புடன் வழிபட்டால் நினைத்த காரியம் எளிதில் கைகூடும். தீராத நோய்கள் தீரும்; தனம் தானியம் பெருகும்; புகழ் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாதம் ஒருமுறை தனது ஜன்ம நட்சத்திர நாளில் இங்கே வர வேண்டும்;ராகு காலத்துக்கு முந்தைய முகூர்த்தத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு,ராகு காலத்தில் சுவர்ண பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 9 ஜன்ம நட்சத்திர நாட்களுக்கு செய்து வர இறையருளும்,குருவருளும்,பைரவ அருளும் சித்திக்கும்.

சுவர்ண பைரவர்

 
Previous
Previous

திருமழிசை வீற்றிருந்த பெருமாள் கோவில்

Next
Next

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் கோவில்