காரிசேரி லட்சுமி நாராயணர் கோவில்

நவபாஷாணத்தால் ஆன அபூர்வ லட்சுமி நாராயணர்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டாரத்தில் அமைந்துள்ளது, காரிசேரி லட்சுமி நாராயணர் கோவில். இக்கோவில் மிகச் சிறியதாக இருந்தாலும், இக்கோவிலின் மூலவர் லட்சுமி நாராயணர் நவபாஷாணத்தால் ஆனவர் என்பது தனிச்சிறப்பாகும். நவபாஷாணத்தால் ஆன மூலவர் என்றால் நம் நினைவுக்கு வருவது முருகக்கடவுள் தான். ஆனால் பெருமாள், லட்சுமி நாராயணராக நவபாஷாணத்தால் ஆன விக்ரகமாக எழுந்தருளி இருப்பது, வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒரு அரிய காட்சியாகும். கருவறையில் மூலவர் லட்சுமி நாராயணர் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருகிறார்.

முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோவிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர் ஒருசமயம் வெள்ளப் பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது. சிலையை எடுத்த மக்கள் இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினர்.

பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால், நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பெரிச்சிகோவில் சுகந்தவனேஸ்வரர் கோவில்

 நவபாஷாணத்தால் ஆன அபூர்வ பைரவர்(02.04.2025) பற்றிய முந்தைய பதிவு

👇 ஆலய தகவல்/படங்களை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்

 https://www.alayathuligal.com/blog/3e4l9lf9k933hybs92fktb4lc7ee7f?rq

 
Previous
Previous

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில்

Next
Next

மரக்காணம் பூமீசுவரர்கோவில்