உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் கோவில்
சரசுவதி தேவி வீணையை வித்தியாசமாக ஏந்தி இருக்கும் அரிய காட்சி
தேனியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உத்தமபாளையம் என்ற ஊரில், சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் காளத்தீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. ஆந்திர மாநிலத்தில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால், இக்கோவிலை. பக்தர்கள் தென்னகத்து காளகஸ்தி என்று அழைக்கின்றனர்.
இக்கோவிலில், இறைவி ஞானாம்பிகை சன்னதியின் பின்பக்கம் சரசுவதி தேவி, மூன்றரை அடி உயரத் திருமேனியுடன், சற்று வித்தியாசமான தோற்றத்தில் எழுந்தருளி இருப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.பொதுவாக சரசுவதி தேவி, வீணையை தன் மடியிலிருத்தி தன் கை விரல்களால் அதை மீட்டும் நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோவிலில் சரசுவதி தேவி வீணையை தன் இடது கரத்தில் செங்குத்தாக, தம்புராவை வைத்திருப்பது போல் காட்சி அளிப்பது, வேறு எந்த கோவிலிலும் நாம் காண முடியாத அரிய காட்சியாகும்.
இக்கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்
1. விஷக்கடியை குணப்படுத்தும் விஷ ராஜா
நாகத்தை வாயில் கடித்தபடி இருக்கும் வித்தியாசமான கோலம்
https://www.alayathuligal.com/blog/uthamapalayam03092024
2. மனைவியருடன் ராகு, கேது அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தரும் அபூர்வ அமைப்பு (17.08.2024)
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf-fecbe-w4jnj
3. ஆற்றில் மூங்கில் கூடையில் மிதந்து வந்த அம்பிகை (02.08.2024)
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf-fecbe-w4jnj
4. சனீஸ்வரருக்கு பச்சை ஆடை உடுத்தும் வித்தியாசமான நடைமுறை (27.07.2024)
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf-fecbe
5. ராசி, நட்சத்திரக் கட்டங்களுக்கு மத்தியில் காட்சியளிக்கும் வாஸ்து பகவான் (04.07.2024)
சூரிய மண்டல ஆகாய ராசிச் சக்கரம் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
https://www.alayathuligal.com/blog/zesgxlf445dmgmsplmn6le83dzrgbf
படங்கள் உதவி : திரு. மாணிக்கவாசக குருக்கள், ஆலய அர்ச்சகர்