திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்கர தாடகங்களின் சிறப்பு

திருச்சிராப்பள்ளி நகரில் அமைந்துள்ள தேவாரத் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும். இறைவன் திருநாமம் ஜம்புகேஸ்வரர் . இறைவியின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி.

ஆதி சங்கரர் திருவானைக்கா தலத்துக்கு வந்தபோது அங்கு அன்னை உக்கிர ரூபத்தோடு காட்சியளித்தாள், அன்னையின் உக்கிரம் தணிக்க, ஆதி சங்கரர் ஸ்ரீசக்கரத்தை தாடகங்கமாகச் செய்து அணிவித்தார். இதனால் அன்னை மனம் குளிர்த்து சாந்த சொரூபியாக, வரப்பிரசாதியாக அருள்பாலித்தார். அன்னையின் தாடகங்கள் ஸ்ரீசக்கர ரூபமாக அமைந்ததால் அதை தரிசனம் செய்வது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை வரம் வேண்டும் பெண்கள், அம்பிகையின் தாடகங்களையே உற்று நோக்கி வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இத்தலத்தில் அம்பாள் முப்பெரும் தேவியராகக் காட்சிகொடுக்கிறாள். அகிலாண்டேஸ்வரி ஒருநாளில், காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்காலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் அருள்பாலிக்கிறாள். மூன்று வேளையிலும் அம்பிகையை தரிசித்து வழிபட செல்வம், வீரம், கல்வி ஆகிய மூன்றும் கிடைக்கும் என்கின்றன வேத சாஸ்திரங்கள்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன்

https://www.alayathuligal.com/blog/p2ltlykayf5sm29zff7943xcfb47l8

Read More