திருப்புடைமருதூர்  நாறும்பூநாதர் கோவில்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்

இரண்டு கால்களையும் மடக்கி தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கும் அரிய கோலம்

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 28 கி.மீ. தூரத்தில் உள்ள வீரவநல்லூர் என்ற ஊரிலிருந்து பிரியும் சாலையில் 7 கி.மீ. தூரம் சென்றால், திருப்புடைமருதூர் திருத்தலத்தை அடையலாம். இறைவன் திருநாமம் நாறும்பூநாதர். இறைவியின் திருநாமம் கோமதி.

மருத மரத்தை தலவிருட்சமாக கொண்ட தலங்கள், 'அர்ச்சுன தலங்கள்' என்றழைக்கப்படும். 'அர்ச்சுனம்' என்றால் 'மருதமரம்' என்று பொருள். அந்த வகையில் அர்ச்சுன தலங்களில் 'தலையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுவது ஸ்ரீசைலம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில், 'இடையார்ச்சுனம்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் உள்ள நாறும்பூநாதர் கோவில் 'கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது.

பொதுவாக, சிவாலயங்களில் இறைவன் கருவறையின் சுற்றுச்சுவரில் தட்சிணாமூர்த்தி, கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, இடது காலை மடித்தும் வலது காலை முயலகன் மேல் ஊன்றியும், அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.

Read More