திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் கோவில்

புதன் கிரகத்துக்கு பரிகாரத் தலமாக விளங்கும் திவ்யதேசம்

கும்பகோணத்தில் இருந்து (17கி.மீ) திருவையாறு செல்லும் வழியில் சுவாமிமலைக்கு அருகில் உள்ள திவ்ய தேசம் திருப்புள்ளம்பூதங்குடி. மூலவர் வல்வில்ராமன். தாயார் ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி. இத்தலத்தில் ராமர் சயன கோலத்தில் அருள் பாலிப்பது தனிச்சிறப்பாகும். இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. வைணவத் தலங்களில் இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தலமான ஸ்ரீபெரும்புதூர்.மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திவ்ய தேசமான திருப்புள்ளம்பூதங்குடி.

பரிகாரங்கள்

நவக்கிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோவிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. இத்தலத்தில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது நன்மை பயக்கும். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடத் திருமணத் தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இக்கோவிலில் இருக்கும் நரசிம்மருக்குத் திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More