பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

பொள்ளாச்சி ராஜகணபதி கோவில்

மூலவர் விநாயகருடன், சிவபெருமானும் கிருஷ்ணரும் எழுந்தருளி இருக்கும் அரிய காட்சி

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ளது ராஜகணபதி விநாயகர் கோவில். இந்த கோவிலில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள ராஜ கணபதிக்கு வலது பக்கம் சிவபெருமானும், இடது பக்கம் கிருஷ்ண பெருமானும் உள்ளனர். இப்படி மூலவர் கணபதிக்கு இரு புறமும் சிவபெருமானும், கிருஷ்ணரும் உடன் எழுந்தருளி இருக்கும் கோலத்தை நாம் எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது. இத்தலத்து சிவபெருமான் திருநாமம் நாகலிங்கேசுவரர். கிருஷ்ணரின் திருநாமம் சந்தான கோபாலகிருஷ்ணன்.

இந்த ராஜ கணபதிக்கு அபிஷேகம் செய்து அவரை ஏழு அல்லது ஒன்பது முறை வலம் வந்தால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடைபெறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, இவருக்கு மஞ்சள் காப்பு செய்வித்தும், தேங்காய் மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.

Read More
மாசாணியம்மன் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மாசாணியம்மன் கோயில்

சயன கோலத்தில் உள்ள அம்மன்

பொள்ளாச்சி அருகில் இருக்கும் ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள். இங்கு அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் 'மயானசயனி' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் 'மாசாணி' என்றழைக்கப்படுகிறாள். மாசாணியம்மன் 17 அடி நீள திருமேனியுடன் கைகளில் கபாலம், உடுக்கை, சூலம்,சர்ப்பம் ஏந்தி மேலே நோக்கியபடி சயனித்திருக்கிறார்.

Read More