மாயூரநாதர் கோவில்

மாயூரநாதர் கோவில்

காவிரி துலா ஸ்நானம்

ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷூ புண்ணிய காலமாக சொல்கிறார்கள். இந்த துலா விஷூ புண்ணிய காலத்தில் தேவர்களின் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதால், இந்த நாட்களில் காவிரி ஆற்றில் ஸ்நானம் செய்வது மிக புனிதமாகக் கருதப்படுகிறது.

புண்ணிய நதிகளானன கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள், மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதால் தங்களைப் புனிதப்படுத்த வேண்டுமென சிவபெருமானிடம் வேண்டினர். சிவபெருமான, மாயூரத்தில் ஓடும் காவிரியில் துலா மாதத்தில் (ஐப்பசி மாதம்) ஓவ்வொரு நாளும். ஒவ்வொரு நதியாக நீராடி தங்கள் பாவச்சுமைகளை நீக்கிப் புனிதம் பெறுலாம் என்று அருளினார். அதன்படி ஐப்பசி மாதத்தில் கங்கை உள்ளிட்ட நதிகள் மயிலாடுதுறையில் உள்ள காவிரியில் நீராடித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு புனிதம் அடைந்தன. அவர்களுடன் தேவர்கள், முனிவர்கள், சரஸ்வதி, வக்ஷ்மி, கெளரி, சப்தமாதர்கள் போனறோரும் மாயூரத்தில் உள்ள காவிரியில் நீராட வருகின்றனர். அதனால் இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால் நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். ஆகவே ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறையில் காவிரியில் நீராடுவது மிகவும் சிறப்புடைதாகும்.

இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வள்ளலார் கோயில். திருஇந்தளூர் பரிமளரெங்கநாதஸ்வாமி ஆகிய தெய்வங்களும் எழுந்தருளுகிறார்கள் . தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் முடிகிறது.

முடவன் முழுக்கு

ஓர் அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் சிவபெருமானிடம் வேண்டினான். அவனுடைய குறையைப் போக்க, 'கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும். ஸ்நானம் செய்' என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர் பெற்றது.

காவிரி துலா ஸ்நான பலன்

இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுமுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின் ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும் (அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும் தவறுகளும் நீங்கப்பெறுகின்றன.

காவிரி துலா ஸ்நான காணொளிக் காட்சி

https://www.youtube.com/watch?v=Xov1u2MCxks

Read More
துர்கையம்மன் கோயில்
Amman, அம்மன் Alaya Thuligal Amman, அம்மன் Alaya Thuligal

துர்கையம்மன் கோயில்

துர்கையம்மனுக்கு தனி கோவில்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்தில் துர்கையம்மனுக்கு என்று தனி கோவில் உள்ளது.

Read More