கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

கோடி விநாயகர்களை வழிபட்ட பலனைத் தரும் கோடி விநாயகர்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பந்தாடுநாயகி. இங்கு இறைவன் சிவபெருமானின் திருபெயா் கோடிஸ்வரா் என்பதை போல மற்ற பரிவார தெய்வங்களுக்கு கோடி என்கிற பெயருடன் விநாயகர் கோடி விநாயகர் என்றும், சுப்ரமணியர் கோடி சுப்ரமணியர் என்றும், சண்டிகேஸ்வரர் கோடி சண்டிகேஸ்வரர். தட்சிணாமூா்த்தி கோடி ஞானதட்சிணாமூா்த்தி என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஒரு தடவை இளவரசன் ஒருவனுக்கு பத்திரயோகி முனிவர், கடும் சாபம் கொடுத்தார். இதன் காரனாமாக அவரது தவவலிமை குன்றியது. இதனால் வருந்தியவர் பரிகாரம் தேட முற்பட்டார். பல்வேறு தலங்களுக்குச் சென்று சிவனை வழிபட்ட அவர் கொட்டையூருக்கும் வந்தார்.

இங்கு அமுத கிணற்று நீரில் பத்திரயோகி முனிவர் நீராடி, சிவனாரை மலர்களால் அரச்சித்து, வழிபட்டு கோவிலை வலம் வந்து வணங்கினார். அப்போது ஓர் அசரீரி ஒலித்தது. பத்திரயோகி! கோடி தலங்களுக்குச் சென்று கும்பிட வேண்டாம். இந்தத் தலமே பெரும்பேற்றைத் தரும். இந்த லிங்கமே கோடி லிங்கம். இந்த தீர்த்தமே கோடி தீர்த்தம். இந்த விநாயகரே கோடி விநாயகர் என்று அசரீரி ஒலித்தது.

பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார். இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர், வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இந்த கோடி விநாயகரை வழிபட கோடித் தலங்களுக்குச் சென்று, கோடி விநாயகர்களை வழிபட்ட பெரும்பலன் கிடைக்கும். இவர் தன்னை வழிபடுவோருக்கு அனைத்து செல்வங்களையும் அள்ளிக் கொடுப்பார்.

Read More
கொட்டையூர்  கோடீஸ்வரர் கோவில்

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் எழுந்தருளியிருக்கும் தேவாரத் தலம்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இறைவியின் திருநாமம் பந்தாடுநாயகி. இத்தலத்தில் நவக்கிரக நாயகர்கள் தங்களுக்கே உரித்தான வாகனங்களுடன் காட்சி தருகிறார்கள. நவக்கிரகங்களின் இந்த அரிதானத் தோற்றத்தை நாம் ஒரு சில தலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவு

கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்

https://www.alayathuligal.com/blog/cddc7ew72pt4xthkmmge3jjj8ncynw

Read More
கொட்டையூர்  கோடீஸ்வரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கொட்டையூர் கோடீஸ்வரர் கோவில்

கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ள பந்தாடுநாயகி அம்பாள்

கும்பகோணம் - திருவையாறு சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில், சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள தேவாரத்தலம் திருக்கொட்டையூர். இறைவன் திருநாமம் கோடீஸ்வரர். இங்கே அம்பாள் பந்தாடுநாயகி என அழைக்கப்படுகிறாள். அம்பாள் சிலையின் ஒரு கால், பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்பது பழமொழி. இத்தலத்தில் பாவம் செய்தவர்கள் கால் வைத்தால் அந்தப் பாவம் கோடி அளவு பெருகிவிடும். அதே போல புண்ணியம் செய்தவர்கள் கால் வைத்தால் புண்ணியம் கோடி அளவு கூடிவிடும்.

விளையாட்டில் உன்னத நிலையை அடைய அருளும் அம்பிகை

விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள், அத்துறையில் உன்னத நிலையை அடையவும், பரிசுகள் பெறுவதற்காகவும் இந்த பந்தாடுநாயகி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.

Read More