கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்

கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில்

பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு காது பெரிதாக உள்ள நந்தி

சிம்மபுரீசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள கருப்பத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிம்மபுரீசுவரர் என்றும், அம்பிகை குந்தாளம்பாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது கருப்பத்தூர் சிம்மபுரீசுவரர் கோவில். இறைவன் திருநாமம் சிம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் குந்தாளம்பாள். நரசிம்மர் பூஜை செய்து பாவம் விலகப்பெற்ற தலம் கருப்பத்தூர். இங்குள்ள இறைவன் நரசிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டு பின் சிம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படலானார்

இத்தலத்து நந்தியம் பெருமான் ஒரு காதில் பெரிய துவாரமும், மற்றொரு காதினை மூடியவாறும் இருக்கிறார். இவரிடம், பக்தர்கள் தங்களின் குறைகளைச் சொன்னால், இறைவனிடம் அக்கோரிக்கைகளை நந்தி கூறுவார். இரணியனை கொன்ற பாவம் நீங்க, நரசிம்மர் இத்தலத்துக்கு வந்து வழிபட்டார். சிவபெருமான் நரசிம்மரைப் பார்த்து, 'இரணியவதம் செய்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை, பாவம் இரண்டும் நீங்கப் பெற வேண்டும் என நந்தியின் காது வழியே கூறு. அவைகள் நீங்கிப் பெறுவாய் ' எனக் கூற அதன்படியே நந்தியின் காதில் நரசிம்மர் கூறி, பின் பாவ விமோசனம் அடைந்தார். எனவேதான், பக்தர்கள் இத்தலத்து நந்தியின் மூலம், தங்கள் கோரிக்கைகளை இறைவனிடம் சமர்ப்பிக்கிறார்கள்.

Read More