பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

சுவாமி மலையை அடுத்து முருகன் குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்

மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். அப்பர் பாடிய தேவார வைப்புத்தலம் இது. முருகன் சுவாமிமலையில் தந்தைக்கு உபதேசம் செய்தது போல், இத்தலத்தில் பிரம்ம தேவனுக்கும், மயிலுக்கும் உபதேசம் செய்து அருளினார்.

பொதுவாக சிவன் கோவில்களில் சிவன் சன்னதிக்கு பின்புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும் ஆனால் இந்தவத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும் ,ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுகிறார்கள். இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், ஆறு முகங்களுடனும், 12 கைகளுடனும் வள்ளி தெய்வயானை சமேதராக எழுந்தருளி இருக்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில், முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

பிரார்த்தனை

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள். இத்தல முருகனுக்கு சண்முக அர்ச்சனை செய்தால், பிறவிக்கடன் தீரும் என்பது ஐதீகம்.

Read More
சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

சுப்ரமணிய சுவாமி கோவில்

முருகனின் இடப்பக்கம் மயிலின் தலை திரும்பி இருக்கும் தலம்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார்14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடனும் 12 திருக்கரங்களுனும் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். பெரும்பாலான முருகன் ஆலயங்களில் மயிலின் தலையானது முருகனின் வலப்பக்கம் திரும்பியிருக்கும் ஆனால் இத்தலத்தில் மயிலின் தலையானது முருகனின் இடப்பக்கம் திரும்பி இருக்கிறது.இது ஒரு விசேடமான அமைப்பாகும்.

Read More