திருமறைக்காடர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருமறைக்காடர் கோவில்

இராமபிரானின் தோஷத்தை நீக்கிய விநாயகர்

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சுமார் 65 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கி.மி. தொலைவிலும், தேவாரத் தலமான வேதாரண்யம் உள்ளது. இறைவர் திருப்பெயர் திருமறைக்காடர். இறைவி யாழினும் இனிய மொழியாள்.

இராமபிரான், சிறந்த வீரனான இராலனணை வதம் செய்ததால் அவரை வீர ஹத்தி தோ௸ம் பீடித்தது. இராமபிரானுக்கு ஏற்பட்ட வீரஹத்தி தோஷத்தை இத்தலத்திலுள்ள விநாயகர் விரட்டி அடித்ததால், அவர் வீரஹத்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வீரஹத்தி விநாயகர் ஒரு காலைத் தூக்கிய நிலையில் காட்சி தருகிறார். இவரின் சந்நிதி, கோயிலின் மேற்கு வெளிப் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது. விநாயகரின் சந்நிதிக்குக் கொடிமரமும் உள்ளது. சுவாமி, அம்பாள், விநாயகர் ஆகிய மூவருக்குமாக மூன்று கொடி மரங்கள் இத்தலத்தில் உள்ளன. இப்படி விநாயகருத்கென்று தனி கொடிமரம் அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

Read More